‘என் மீது அதைக் கழற்றி எறிந்தார்’.. நடிகை ஷில்பா ஷெட்டியுடன் விவாகரத்துக்கு இதுதான் காரணமா…? முதன்முறையாக மனம் திறந்த அவரது கணவர்…

By admin

Updated on:

பாலிவுட் திரை உலகில் 90களில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷில்பா ஷெட்டி. ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் தமிழில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மிஸ்டர். ரோமியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு விஜயின் குஷி திரைப்படத்தில் பேக்கரினா என்னும் பாடலில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்திருந்த இவர் பாலிவுட்டில் எக்கசக்கமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

   

கடந்த 2009ல் ராஜ் குந்த்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் ஷில்பா ஷெட்டிக்கு தற்போது 48 வயது ஆகியுள்ளது. ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, கடந்த 2021-ம் ஆண்டு ஆபாச பட வழக்கில் கைதானார். ஆபாச படங்களை தயாரித்து அதனை ஆன்லைனில் வெளியிட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார்.

இரண்டு மாதங்கள் சிறையில் இருந்து விட்டு வெளியே வந்துள்ள ராஜ்குந்த்ரா தனது வாழ்க்கையை ‘யூடி 69’ என்ற பெயரில் சினிமா படமாக எடுத்துள்ளார். அந்த நேரத்தில் ஷில்பா ஷெட்டி தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் ராஜ் குந்தரா தனது சமூக வலைதளத்தில் ‘நாங்கள் பிரிந்து விட்டோம். இந்த கடினமான நேரத்தில் தயவு செய்து எங்களுக்கான நேரத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன்மூலம் ராஜ் குந்தரா-ஷில்பா ஷெட்டி ஜோடியின் 14 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் மும்பையில் பேட்டி அளித்த ராஜ்குந்த்ரா தனது விவாகரத்துக்கான காரணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது ‘நான் சினிமாவில் நடிக்க போகிறேன் என்று ஷில்பா ஷெட்டியிடம் சொன்னதும் செருப்பை கழற்றி என் மீது வீசி எறிந்தார். இதில் நான் அதிர்ச்சியடைந்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.