தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதனால் பல கட்சிகளும் இந்த கட்சிகளுடன் கூட்டணி நிலைப்பாட்டை உறுதி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் ஒரு சில கட்சிகள் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடாமல் மௌனம் காத்து வருகின்றன. இதனிடையே புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சமீபத்தில் நடந்த கட்சி மாநாட்டில் பேசிய போது, திமுக ஆட்சி தவறு மேல் தவறு செய்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சி இருக்கும் வரை எந்த திட்டங்களும் மக்களை சென்று சேராது.
திமுக ஆட்சிக்கும் விடை கொடுப்பது தான் ஒரே வழி. வெனிசுலா அதிபர் செய்த குற்றச்சாட்டை விட மிகப்பெரிய தவறுகளை ஸ்டாலின் செய்து உள்ளார். தமிழகத்தில் மது கடைகளை திறந்து வைத்துள்ள முதலமைச்சருக்கு என்ன தண்டனை கொடுப்பது. ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி அமைக்கும் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
தமிழக வெற்றி கழகம் கட்சி மட்டுமே ஆட்சியில் பங்கு மற்றும் அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாட்டை முன் வைத்துள்ள நிலையில் பெரும்பாலான கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்டு வருவதால் திமுக மற்றும் அதிமுக இதற்கு சம்மதம் தெரிவிக்காத பட்சத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என தெரிகிறது. புதிய தமிழகம் கட்சியும் அதே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 4 முதல் 12-ஆம் வகுப்புகளுக்குத் திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று…
கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் தற்காலிகக் கட்டண விலக்கு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.…
மதுரை புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் மர்ம…
புதுச்சேரிக்கு அருகில் உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற அழகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது பல்வேறு…
தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பதவியேற்று வெறும் 14 நாட்களே ஆகியுள்ள நிலையில், பிக்பாஸ்…
பிறந்த சில நிமிடங்களிலேயே எருமைக்குட்டி ஒன்று ஆண் சிங்கத்திடம் சிக்கியதும், அதை மீட்க தாய் எருமை உயிரைப் பணையம் வைத்து…