ஈரான் நகரங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஹோர்முஸ் நீரிணையை 48 மணி நேரத்திற்குள் திறக்க வேண்டும், இல்லையெனில் ஈரானை “நரகத்திற்கு அனுப்புவோம்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
மேலும் ஈரானின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் ஒரு பல்கலைக்கழகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் தலைநகர் தெஹ்ரானின் பல பகுதிகளில் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளதோடு, பெரும் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
இதனால் டிரம்பின் காலக்கெடுவை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளதோடு, அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணியப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் இருவர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால், பிராந்தியம் முழுவதும் மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்கும் வகையில் எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் என்று ஈரான் அரசு எச்சரித்துள்ளது. இந்த மோதல் போக்கினால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.…
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…