சர்வதேச போர் சூழலால் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், சமையல் எண்ணெய் விலை கடந்த இரண்டு வாரங்களில் அதிரடியாக உயர்ந்துள்ளது நடுத்தர வர்க்க மக்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, அத்தியாவசியத் தேவையான பாமாயில் லிட்டருக்கு ₹110-லிருந்து ₹122 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ₹155-லிருந்து ₹175 ஆகவும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
மேலும், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலையும் தலா ₹5 வரை அதிகரித்துள்ளதால், ஏற்கனவே விலைவாசி உயர்வால் திணறி வரும் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய சந்தையில் நிலவும் இந்த நிச்சயமற்ற சூழல் நீடிக்கும் பட்சத்தில், சமையல் எண்ணெயின் விலை இன்னும் உயருமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளதுடன், அரசு சந்தை விலையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வலுத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…