இஸ்ரேல் – ஈரான் இடையே இப்போது கடும் போர் நடந்து வருகிறது. இது பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவம் துபாயில் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் துபாயில் புகழ்பெற்ற கட்டிடங்கள் தாக்குதலால் சேதமடைந்து தீப்பிழம்பாக எரியும் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அந்த காட்சிகளை பார்க்கும்போது பலரும் பதைபதைத்து போகின்றனர். துபாயில் வான்வழியாக கடும் தாக்குதல் நடந்து வரும் நிலையில் அங்குள்ள இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏவுகணை தாக்குதல் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டு விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தங்களை காப்பாற்றும்படி பிரதமர் மோடிக்கு அங்குள்ள தமிழக மக்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கிடையே துபாயில் கார் ரேஸில் கலந்துகொண்டு உள்ள நடிகர் அஜீத்குமார் எப்படி இருக்கிறார் என்ற பதைபதைப்பும் கவலையும் அவரது ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் அஜீத்குமார் இன்று சென்னைக்கு திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் துபாயில் கடும் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவருடைய பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும் இப்போது அஜீத்குமார் இப்போது பாதுகாப்பாக இருக்கிறார். இந்த பதட்டமான சூழல் முடிவடைந்ததும் அஜீத்குமார் சென்னை திரும்புவார் என்று அஜீத்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறியதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், சந்தியா ஷர்மா (28) என்ற ஆசிரியை வகுப்பறையில் பாடம்…
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் முன்னாள் மனைவி ஆர்த்தி தனது…
வியட்நாமில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், பெண் ஒருவருக்கு இருசக்கர வாகனத்திலேயே குழந்தை பிறந்த அதிர்ஷ்டகரமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.…
ஜார்ட் கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்ற அரசுப் பணி நியமனத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில், பெண் மாணவி ஒருவர்…
சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், பர்கர் கிங் உணவக ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு குடிநீர் வழங்க மறுத்து, அவரிடம் கடுமையாகப்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் ஜெய்பூரியா ஷோப்பிங் மாலுக்குள் இளைஞர் ஒருவர், பெண்ணைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ…