இந்திய சினிமாவின் பிரபல முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். தனது தனித்துவமான திரைப்படங்கள், மூலம் ஒவ்வொரு முறையும் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துபவர். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான நேரம், பிரேமம் போன்ற படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்த படங்களாகும்.
‘பிரேமம்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘கோல்ட்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து தற்போது ‘கிஃப்ட்’ எனும் படத்தை இயக்கி வந்தார்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக தான் சினிமாவில் இருந்து விலகி கொள்கிறேன் என கூறியுள்ளார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, ‘ எனக்கு autism spectrum disorder என்ற மூளை சார்ந்த பிரச்சனை உள்ளது.
நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. இனி சினிமா தியேட்டர் வாழ்க்கையில் இருந்து விலகி, பாடல்கள் மற்றும் குறும் படங்கள் மட்டும் இயக்குவேன்’ என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பானது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த பதிவு…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த…
மேற்கு வங்க மாநிலம் கூச் பெகர் (Cooch Behar) மாவட்டத்தைச் சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவர், அம்மாநில வாக்காளர்…
கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த முரளி வேல் என்பவர் கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி வரதலட்சுமி (23). இவர்களுக்குத் திருமணம் முடிந்து…
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் நடைபெற்ற இந்த 15 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. …
ஆம், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2026-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி(நேற்று ) ஆதாருக்கான பிரத்யேக அடையாளச்…
எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி) பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள்: 549…