தமிழ் திரையுலகில் 48 வருடங்களுக்கு மேலாக சிறந்த இசையமைப்பாளராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இளையராஜா. இந்திய அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்து ஐந்து முறை தேசிய விருது பெற்றுள்ளார். அதேசமயம் உலக அளவில் 20,000 மேற்பட்ட இசைக்கச்சேரிகளை அவர் நடத்தியுள்ளார். மறைந்த இசை மேதை எம்எஸ் விஸ்வநாதனுக்கு அடுத்தபடியாக தமிழ் திரை உலகில் என்றளவும் மிகப்பெரிய புகழோடும் திறமையோடும் வலம் வந்து கொண்டிருக்கும் இளையராஜாவை இசையில் அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.
இன்றைய காலகட்டத்தில் ஒரு பாடலை அமைப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வரும் நிலையில் 1980 களின் தொடக்கத்தில் இளையராஜா மிக மிக பிஸியான இசையமைப்பாளராக இருந்து வந்த சமயத்தில் ஒரே நாளில் பல திரைப்படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார். அதாவது ஒரு நாள் காலை 6 மணி முதல் 9 மணி வரை வெறும் 3 மணி நேரத்தில் மூன்று வெவ்வேறு திரைப்படங்களுக்கு மொத்தம் 21 பாடல்களுக்கான டியூனை அமைத்து மூன்று இயக்குனர்களையும் இளையராஜா மிரட்டினார்.
இந்நிலையில் சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சென்று இசைக்கச்சேரிகளை நடத்தி வரும் இவர் தற்போது தனக்கான ட்ரம்பட்டை தானே வாசித்துக் கொள்கிறேன் என்றும் ஆனாலும் அது சுகமான ஒரு அனுபவம் தான் என்றும் பதிவிட்டுள்ளார். தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறேன் என்றும் அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது என்று இளையராஜா பதிவிட்டுள்ளார்.
மேலும் அதில் நூறு வருட இந்திய சினிமாவில் சொந்தமாக இசையை எழுத்து வடிவில் எழுதக்கூடிய ஒரே இசைக்கலைஞன் இசைஞானி இளையராஜா மட்டும் தான் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது என்று தன்னைப் பற்றிய குறிப்பை தன்னுடைய பக்கத்தில் இளையராஜா பதிவிட்டுள்ளார். இதனைய டுத்து இனையவாசிகள் பலரும் இசைக்கு எழுத்து இருக்கிறது என்பது இன்று தான் எங்களுக்கே தெரியும் சார் என்று பல விதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…