நம்மிடையே இசை, பாடல் இருக்கின்றது என்றால் அது இளையராஜா இல்லாமல் இருக்க முடியாது. 70ஸ் காலகட்டத்தில் தொடங்கி 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் இசையை தன்வசப்படுத்திய இசையமைப்பாளர்களில் மிக முக்கியமான நபர் இளையராஜா. இவரிடம் அனைத்து சந்தர்ப்ப, சூழ்நிலைக்களுக்கான பாடலும் இருக்கும், நவரசங்களுக்கான பாடல்களும் இருக்கும். காதல், தோல்வி, ஏமாற்றம், வெற்றி, மகிழ்ச்சி என நாம் என்ன மாதிரியான சூழ்நிலையில் இருந்தாலும், அப்போது இளையராஜாவின் பாடல்கள் இல்லாமல் இருக்காது.
2010-க்கு பிறகு புது இசையமைப்பாளர்கள், அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்கள் வருகை தர தர, அவரும் சற்று ஓய்வெடுக்க ஆரம்பித்தார். அத்திப் பூத்தாற் போல, வருடத்திற்கு ஒரு படமாவது நிச்சயம் கொடுத்து விடுவார். அவ்வாறு அவர் கடைசியாக கொடுத்த விடுதலை பட பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இப்படி இசையில் ஒரு மன்னனாக இருக்கும் இளையராஜா, அவ்வப்போது தனது கருத்துகளால் சர்ச்சையில் சிக்குவதும் உண்டு.
மறைந்த பாடகர் எஸ்.பி.பியுடன் பிரச்னை, பிரதமர் மோடி மற்றும் அம்பேத்கரை இணைத்து முன்னுரை எழுதியது, பிரசாத் லேப்பில் இருந்து வெளியேறாமல் இருந்தது என தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்தவர், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். நேற்று (04.01.2024) அன்று நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளையராஜா, மேடையில் பேசிய போது, அந்த காலத்தில் தொடர்ந்து ஒரு நாளைக்கு 12 ரீல் வாசிப்பேன். 3 ரெக்கார்டிங் தியேட்டரில் காலை 7 மணிக்கு ஒன்று மதியம் 2 மணிக்கு ஒரு பாட்டு, மாலை 7 மணிக்கு ஒரு பாட்டு என 3 பாடல்களை டியூன் போட்டு கம்போஸ் செய்து கொடுத்து விடுவேன். ஆனால், இப்போதெல்லாம் ஒரு பாடலை கம்போஸ் செய்ய 6 மாதம், ஏன் ஒரு வருடம் கூட சில இசையமைபாளர்களுக்கு தேவைப்படுவதாகவும், ஏனெனில் அவர்களுக்கு இசை வரவில்லை எனவும் கூறியிருந்தார்.
இவரது இந்தப் பேச்சு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தனது கர்வத்தால், இப்படி அடுத்த கலைஞர்களை இழிவுப்படுத்தி பேசுவது சரியல்ல என பலரும் தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், தனது எக்ஸ் தள பதிவில், இளையராஜாவை கடுமையாக சாடியுள்ளார். ”கர்வத்தில் இருந்து விடுபட்டதை கர்வமாக சொன்ன இளையராஜா” என அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…