Categories: TRENDING

இயக்குனரிடம், இந்த எடத்துல ஒரு பாட்டு ஒன்னு கம்போஸ் பண்ணி தரேன் போடுன்னு சொன்ன இளையராஜா.. செம்ம ஹிட்டான ரஜினியின் அந்த பாட்டு..

சில சமயங்களில் ஒரு சில படங்கள் தோல்வியை தழுவுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முதலாவதாக அப்ப படத்தினுடைய கதை, கதாபாத்திரங்களின் தேர்வு, திரைக்கதை வசனம், பாடல்கள் ஒளிப்பதிவு என பல விஷயங்களும் அப்படத்தை வெற்றி படமாக மாற்றுகின்றன. இதில் ஏதாவது ஒன்று சரிவை சந்தித்தாலும் கூட அப்படம் முழுவதுமே சரிவை சந்திக்க நேரிடும். அது மட்டுமல்லாமல் ஒரு படம் என்பது பலரின் கூட்டு முயற்சியாக தான் உருவாக்கும்.

#image_title

ஒரு சில இயக்குனர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என தன்னுடைய கதையை மட்டுமே ஒளிப்பதிவு செய்து அதை படமாக வெளியிடுவர். ஒரு சில இயக்குனர்கள் பிற தொழில்நுட்ப கலைஞர்களும் கூறக்கூடிய சிறு சிறு திருத்தங்களை தனது படத்தில் திருத்திக் கொண்டு அதன் பிறகு ஒளிப்பதிவு செய்து அதை வெளியிடுவர். ஒரு சில நேரத்தில் இவை அப்பிடத்திற்கு பெரிதும் கை கொடுப்பதாக இருக்கும். அந்த வகையில் தான் ரஜினிகாந்தினுடைய படிக்காதவன் படத்தில் இளையராஜா கொடுத்த ஒரு சின்ன அட்வைஸ் அப்படத்தையே வேறு தளத்திற்கு எடுத்து சென்றது என கூறலாம்.

1985 ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அம்பிகா சிவாஜி உட்பட பலர் நடிப்பில் உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் படிக்காதவன். வக்கீலான சிவாஜி தன் இரண்டு தம்பிகள் மீது உயிரையே வைத்திருப்பார் சிவாஜியின் தோற்றத்திற்கும் சிறுவர்களுக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகம் என்பதால் இரண்டாம் தாரத்தின் பிள்ளைகள் என்பது போல ஒரு பாயிண்டை சாமர்த்தியமாக இணைத்து இருப்பார்கள். சமையல் உள்ளிட்ட விஷயங்கள் சிரமமாக இருப்பதால் திருமணம் செய்து கொள்வார் சிவாஜி. ஆனால் வந்த அந்நியோ இரண்டு தம்பிகளையும் கடுமையாக திட்டி வீட்டை விட்டு துரத்திவிடுவார்.

#image_title

பிரிந்த சகோதரர்கள் கடைசியில் இணைந்தார்களா? என்பது தான் படிக்காதவன் படத்தின் கதை. இளையராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்று இருந்த பாடல்கள் அனைத்தும் பாட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டது. குறிப்பாக ’ஊர தெரிஞ்சுகிட்டேன்’ என்ற பாடல் இன்றைய வரைக்கும் துரோகத்தால் வீழ்ந்தவர்களுக்கு ஒரு ஃபேவரிட் பாடலாக இப்பாடல் இருக்கும். இப்பாடல் இப்படத்தில் இடம்பெறுவதற்கு ஒரு சுவாரசியமான நிகழ்வை நினைவு கூறலாம்.

#image_title

அதாவது இப்படத்தை முழுமையாக முடித்துவிட்டு இயக்குனர் ராஜசேகர் இப்படத்தை இளையராஜா அவருக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார். இப்படத்தை பார்த்த இளையராஜா இந்த இடத்தில் ஒரு பாடல் நிச்சயமாக இடம்பெற வேண்டும் என கூறியிருக்கிறார். அந்தக் காலத்தில் இளையராஜாவின் சொல்லை தட்டுவதற்கு யாருக்கும் தைரியம் இருந்திருக்கவில்லை. தயாராப்பாளர்கள் கியூ வில் நின்று அவரிடம் கால்ஷீட் வாங்கிய காலம் அது.

#image_title

மறுநாள் இளையராஜா தன்னுடைய ஸ்டுடியோவிற்கு சென்று மதியத்திற்குள் ஒரு பாட்டை தயார் செய்து அதை அப்படத்தில் இணைக்க கூறியிருக்கிறார். அவசர அவசரமாக அன்று இரவே செட்டு போட்டு இந்த பாடலுக்கான காட்சிகளையும் எடுத்திருக்கின்றனர். பிறகு படம் திரையிட்ட பிறகு இளையராஜாவால் இணைக்கப்பட்ட அந்த பாடல் மிகப்பெரிய பலத்தை இப்படத்திற்கு கொடுத்தது என்னலாம். அந்த பாடல் தான் ’ஊர தெரிஞ்சுகிட்டேன்’ பாடல்.

Archana
Archana

Recent Posts

சினிமாக் காரர்களைக் கூத்தாடிகள் எனத் திட்டிய பெரியார் NSK-வை இப்படி புகழ்ந்திருக்கிறாரே… ஓ இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவில் முதல் முதலில் பகுத்தறிவு மற்றும் முற்போக்கான கருத்துகளை தன்னுடைய நகைச்சுவை காட்சிகள் மூலம் பரப்பியவர் என் எஸ்…

31 நிமிடங்கள் ago

அறிமுகப்படுத்திய வசந்தபாலனையே அடுத்த படத்துக்கு அலையவிட்ட ஜி வி பிரகாஷ்… சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா மொமண்ட்!

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்கள்…

40 நிமிடங்கள் ago

படத்தின் தோல்வியால் பாக்யராஜை சுட துப்பாக்கியை எடுத்த தயாரிப்பாளர்… ‘என் ரத்தத்தின் ரத்தமே’ பட backstory தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக்…

50 நிமிடங்கள் ago

அப்பா பிரசன்னாவை அப்படியே உறித்து வைத்திருக்கும் நடிகை சினேகாவின் மகன்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..

நடிகை சினேகா தனது மகன் விகானுடன் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்து…

11 மணி நேரங்கள் ago

நடிகை அமலா பாலுக்கு குழந்தை பொறந்தாச்சு.. குழந்தைக்கு பெயர் ரொம்ப வித்தியாசமா இருக்கே..!

நடிகை அமலா பால் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில்…

12 மணி நேரங்கள் ago

அஜித்தால் மண்டையை பிச்சுகிட்டு இருக்கும் இயக்குனர் மகிழ்திருமேனி.. விடாமுயற்சி வருமா? வராதா?.. ஒரு முடிவுக்கு வாங்கப்பா..!

நடிகர் அஜித்தின் செயலால் இயக்குனர் மகிழ் திருமேனி மிகப்பெரிய குழப்பத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும்…

13 மணி நேரங்கள் ago