#image_title
தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
அதுபோல இளையராஜாதான் நாட்டுப்புற பாடல்களில் இருந்தே ட்யூன்களை எடுத்து அதை மெருகேற்றி பாடல்களை கொடுத்து மக்களை மெய்மறந்து ரசிக்க வைத்தார். இளையராஜா அறிமுகமான போது அவருக்கு மக்களிடம் கிடைத்த ஆதரவு அப்போதிருந்த விமர்சகர்களிடம் கிடைக்கவில்லை.
ஆனாலும் விமர்சகர்களை ‘ஓரம்போ’ என சொல்லிவிட்டு வெற்றிகொடி நாட்டி, விரைவில் பொன் விழா காணவுள்ளார். இந்நிலையில் சிறுவயதில் இசை எப்படி தனக்குள் வந்தது என ஒரு நேர்கானலில் கூறியுள்ளார். அதில் “நான் சிறுவயதாக இருக்கும்போது, எங்கள் வீட்டில் அண்ணன் ஒரு ஹார்மோனியம் வச்சிருந்தார். அத எடுத்து வாசிக்கலாம்னா, எங்க அண்ணன் அடிச்சுடுவார்.
அதனால் அவர் இல்லாத போதுதான் திருட்டுத் தனமாக எடுத்து ஹார்மோனியத்த வாசிப்பேன். அப்படிதான் ஹார்மோனியம் என் மனசுக்குள் வந்தது. ஒரு நாள் நான் தூங்கிஎழுந்த போது என் அம்மா என்னிடம் “என்ன ராசா ராத்திரி கனவுல ஹார்மோனியம் வாசிக்குற மாதிரி கனவு கண்டியா” எனக் கேட்டார். ஏன் அப்படி கேட்கிறீர்கள் என்று கேட்டபோது “ராத்திரி என் நெஞ்சில் உன் கைகள் ஆர்மோனியம் போல மேலயும் கீழயும் போயிட்டு வந்துச்சு” என சொன்னார்” எனக் கூறியுள்ளார்.
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…