அதிமுகவை ‘தூர்ந்து போன சக்தி’ என்று விமர்சித்துப் பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ, அன்றே தவெகவின் அரசியல் ஆட்டம் அடங்கி, அதன் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்றும், அதற்காக ஸ்டாலினுக்குக் கோபம் வரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், மதயானைக்கு நிகராகக் கருதப்படும் திமுகவையே தங்கள் ஆட்சிக்காலத்தில் அடக்கி ஆண்ட பாரம்பரியம் கொண்டவர்கள் அதிமுகவினர் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தங்களை வீழ்ந்து போன சக்தியாக எடைபோட வேண்டாம் என எச்சரித்தார். அத்துடன், தற்போது தார்மீக அடிப்படையில் முதலமைச்சர் பொறுப்பில் அமர்ந்திருப்பது போல் கற்பனையில் மிதந்து பேசாமல், விஜய் தனது எதார்த்த நிலையை உணர்ந்து பேச வேண்டும் என்றும் ராஜேந்திர பாலாஜி சாடியுள்ளார்.
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று, கடந்த 21-ஆம் தேதியே தனது பதவியை…
கொழுக்குமலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கார்த்திக்(31) என்பவர், எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து சுமார் 500…
சென்னை மெரினா கடற்கரையில் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் திரளக் கூடும் என்ற ரகசியத் தகவலின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப்…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக இருந்துவந்த திமுக-அதிமுக என்ற இருமுனைப் போட்டியை உடைத்து, புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்களும்…
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில், தன் கூட்டணிக் கட்சிகளுக்குத் தகுந்த முக்கியத்துவமும் ஊடக வெளிச்சமும் வழங்கி, அவர்களைத் தேசிய மற்றும் மாநில…
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் மாலேபென்னூர் பகுதியைச் சேர்ந்த ஈரம்மா (58) என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்த நிலையில்,…