Categories: NEWS

ஓட்டுநர் இல்லாமல் தானாக 70 கி.மீ. ஓடிய சரக்கு ரயில்.. எப்படி நிறுத்துனாங்க தெரியமா..?

இந்தியாவில் சமீப காலங்களாக ரயில் விபத்துகள் அடிக்கடி நடந்து வரும் வேளையில் இந்த ஆண்டில் முதன் முதலாக ஒரு பெரும் விபத்திலிருந்து தப்பித்திருக்கிறது ரயில்வே துறை. ஆம்.. எங்கும் நிற்காமல், ஓட்டுநரே இல்லாமல், சுமார் 80 கி.மீ தூரத்திற்கு தானாக ரயில் செல்ல ஆரம்பித்திருக்கிறது. போகப் போக வேகம் கூட அதிகாரிகள் என்ன செய்வது தெரியாமல் திகைத்து நின்றனர். தொடரி திரைப்படத்தில்தான் இப்படி ஒரு காட்சி வரும். ஆனால் அதை நிஜமாக்கும் வகையில் இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது.

சாதாரண தேங்காய் எண்ணெய்க்குப்பின் இருக்கும் 70,000 கோடி சாம்ராஜ்யம்.. பாரசூட் தேங்காய் எண்ணெய் உருவான வரலாறு..

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவா ரயில் நிலையத்திற்கு 53 பெட்டிகள் மற்றும் 2 எஞ்சின்களை கொண்ட சரக்கு ரயில் கடந்த பிப். 25-ம் தேதி காலை 7:30 மணியளவில் வந்தடைந்தது. அதன்பின் ஏற்கனவே ரயிலில் இருந்த லோகோ பைலட்டுகள் பணியை முடித்துக்கொண்டு கத்துவாவில் இறங்கியதால் வேறு ஓட்டுநர்களைக் கொண்டு ரயில் பஞ்சாப் செல்லவிருந்தது. இந்நிலையில் ஓட்டுநர்கள் ரயிலை விட்டு இறங்கியபோது முறையாக ஹேண்ட் பிரேக் போடப்படவில்லை என கூறப்படுகிறது.

#image_title

அப்போது தண்டவாளத்தின் ஜலந்தர் பிரிவில் சாய்வான பாதையில் ரயில் நிறுத்தப்பட்டிருந்ததால் தானாக ஓட்டுநர்கள் இல்லாமலே ரயில் புறப்பட்டுச் சென்றது. 70 கிலோ மீட்டருக்கு அதிகமான வேகத்தில் ரயில் பயணித்ததால் ரயில்வே அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்திருக்கின்றனர்.

பின்னர் அந்த வழியாக உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் மூடப்பட்டது. மேலும் லெவல் கிராசிங்குகளும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டது. சுமார் ஒன்றரை மணிநேரம் அதாவது காலை 7:25 மணி முதல் 9:00 மணி வரை ஜல்லிக் கற்களை ஏற்றிக்கொண்டு சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் அசுர வேகத்தில் வந்த சரக்கு ரயிலை பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்திஹ்ல் உள்ள ஊஞ்சி பஸ்ஸி அருகே பிரம்மாண்ட மணல் மூட்டைகள் மற்றும் உறுதியான மரக்கட்டைகள் உதவியுடன் நிறுத்தியிருக்கின்றனர்.

#image_title

நல்லவேளையாக இந்த சம்வத்தால் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்றும், இந்த சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

John

Recent Posts

கருப்பு கலர் சேலையில்.. காந்தப்பார்வை வீசி ரசிகர்களை ஈர்க்கும் விஜே அஞ்சனா.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல தொகுப்பாளினியான விஜே அஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே-வாக தன்னுடைய…

2 hours ago

அடிச்சது ஜாக்பாட்.. சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை..

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்த சீரியல்…

3 hours ago

அடேங்கப்பா..! இத்தனை கோடியா..? விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபலம்.. வைரலாகும் புகைப்படம்..!

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஷான் நிகம். இவர் கடந்த 2023 ஆம்…

5 hours ago

அடடே அப்படியா..! விஜய்க்கு ஜோடியாக சூர்யா பட நடிகை.. அப்ப திரிஷா, சமந்தா இல்லையா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

5 hours ago

குக் வித் கோமாளி சீசன் 5-யின் முதல் எலிமினேஷன் இவர் தானா..? அவரே வெளியிட்ட பதிவு..

விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக்…

7 hours ago

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

13 hours ago