#image_title
இந்து மத வழிபாட்டில் கார்த்திகை மாதம் மிகவும் சிறப்பானது. ஏனென்றால் இந்த மாதத்தில் தான் தீபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இந்த கார்த்திகை மாதம் வந்து விட்டாலே தொடர்ந்து மார்கழி தை என வரிசையாக தெய்வங்களுக்கு முக்கியமான மாதங்களாக இருக்கிறது. இந்த கார்த்திகை மாதம் சிவபெருமானுக்கு உரியதாகும். இந்த கார்த்திகை மாதம் வரக்கூடிய சோமவார விரதம் எப்படி கடைப்பிடிப்பது சிவனை எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றி இனி காண்போம்.
கார்த்திகை மாதம் வரக்கூடிய திங்கட்கிழமைகளை சோமவாரம் என்று கூறுவர். இந்த சோமவார திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்ததாகும். இந்த நாளில் விரதம் இருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட தலையெழுத்து கூட மாறி வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். தேவர்கள் முனிவர்கள் அரசர்கள் உள்ளிட்ட பலரும் சோமவார விரதத்தை கடைப்பிடித்து அளவில்லாத பலனை பெற்றுள்ளனர் கூறப்படுகிறது.
சோமவார விரதத்தன்று அதிகாலை எழுந்து குளித்துவிட்டு காலை முதலே உபவாசமாகவோ அல்லது ஒருவேளை மட்டும் உணவு சாப்பிட்டோ விரதம் இருக்கலாம். அன்றைய தினம் யாருக்காவது உணவு தானமாக வழங்க வேண்டும். மாலையில் சிவாலயங்களுக்கு சென்று சிவனை வழிபட்டு வரலாம். பின்னர் வீட்டில் சிவபெருமான் படத்திற்கு முன்பு பழம் அல்லது சர்க்கரைப் பொங்கல் என ஏதாவது இனிப்பு வகைகளைப் படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
நீங்கள் என்ன வேண்டுதல் வைத்திருக்கிறீர்களோ என்ன நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை ஒருமனதாக மனதில் வைத்து மனம் உருகி சிவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். அதற்கு பிறகு நம்முடைய விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இப்படி கார்த்திகை மாதம் வரக்கூடிய அனைத்து திங்கட்கிழமைகளையும் சோமவார விரதத்தை கடைபிடிக்கும் போது நிச்சயமாக அதனுடைய பலன் அதிகமாக இருக்கும். உங்களது வேண்டுதல்கள் நிறைவேறும்.
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…