பஸ் டிரைவரின் மகனாக இருந்து, இந்திய சினிமாவையே பிரமிக்க வைத்து எப்படி.. பலரும் அறிந்திராத KGF யாஷின் மறுபக்கம்..
#image_title
Spread the love
கண்டக்டர் மகனாக தன் வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்து இப்ப அரசியல் வரை தாக்கத்தை கொண்டு வந்திருக்கும் K.G.F யாஷ் அவர் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தெரிவித்த விஷயம் தான் சமூக வலைதளங்களில் சர்ச்சையாக பரவி வருகிறது. கனடாவில் ஒரு மூலையில் இருக்கும் ஒரு கிராமத்தில் ஒரு குழந்தையாக வளர்ந்தவர் தான் யாஷ் அவர்கள், அவர் தந்தை ஒரு அரசு பேருந்தின் நடத்துனராக பணியாற்றியவர், இவர் குடும்பம் நடத்தற குடும்பமாக இருந்து சாதாரண வாழ்க்கையை வாழ்ந்த யாஷ் அவர்கள், சிறுவயதில் இருந்து சினிமாவைப் பார்த்து ஆர்வம் கொண்டவராக இருந்தார்,
ஆனால் அவர் தந்தைக்கோ நம் மகன் அரசு உத்தியோகத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்து, தன் மகனிடம் படித்து முடித்தவுடன் என்ன ஆகப் போகிறேன் என்று கேட்டதற்கு நான் பெங்களூர் சென்று சினிமா துறையில் சேர உள்ளதாக தெரிவித்த போது குடும்பத்தினர்கள் அதை எதிர்த்து உள்ளார்கள், அதை மீறியும் அவர் 350 ரூபாயை வைத்துக் கொண்டு பெங்களூருக்கு சென்று, அங்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார், அப்பொழுது ஒரு துணை இயக்குனர் அறிமுகமாகி அவர் மூலமாக ஒரு கூத்து பட்டறைக்கு நடிக்கும் திறமை வளர்ப்பதற்காக சேர்ந்துள்ளார், அங்கு முதலில் கூட்டும், பெருகும், துடைக்கும் வேலையை மற்றும் பார்த்த அவர்,
அதன் பின் அதை வைத்து ஒரு நாடகத்தில் சிறியதாக ஒரு சீனில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, அதில் நடித்து அதை வைத்து பல சினிமாக்களில் வாய்ப்புகள் தேடி உள்ளார், அதன் பின்னராக ஒரு சீரியலில் வாய்ப்பு கிடைத்து அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஓரளவு சின்னத்திரையில் பிரபலமானார், அதை வைத்து அவர் ஒரு பிரபல மான தயாரிப்பு கம்பெனியில் ஒரு இயக்குனர் இயக்கத்தில் படம் ஒன்று நடித்தார், அப்படத்திற்கு பெரிதாக மக்கள் ஆதரவு தருவார்கள் என்று நினைத்தார், ஆனால் அப்படம் அட்டர் பிளாப்பாக மாறியது, அதன் பின் யாஷ் அவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார், அப்பொழுது யாஷ் அவர்களின் கிராமத்தின் அருகில் உள்ள இடத்தில் ஒரு வறண்டு போன ஏரியை கண்ட யாஷும் அவர் மனைவியும் அதை தூர்வாரி சீரமை க்க திட்டமிட்டார்கள்,
இருவரும் சேர்ந்து அறக்கட்டளை ஒன்று ஆரம்பித்து அதில் வரும் பணத்தை வைத்து அந்த ஏரியை சீரமைத்தார்கள், அதற்குப் பின் தான் இவர் வாழ்க்கையை மாற்றி போட்டது, அந்த புகைப்படம் கன்னடம் அளவில் பிரபலமாக ஆனது, அதை பார்த்த இயக்குனர் பிரசாந்த் நீல் அவர்கள் “K.G.F பாகம் 1” ஹீரோ கேரக்டருக்காக ஆளைத் தேடி வந்த நிலையில், இப் புகைப்படத்தை பார்த்து இவரை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.
அதன் K.G.F திரையில் வெளியானது, வெளியான பிறகு இந்திய அளவில் மிகப்பெரிய அளவிற்கு பேசும் பொருளாக மாறினார், பட்டி தொட்டி எல்லாம் பட்டய கிளப்பி ஓடியது அப்படம், வெளியான பிறகு யாஷின் வளர்ச்சி எங்கோ கொண்டு போய் சென்று விட்டது, இந்திய அளவில் பிரபலமான ஒரு நடிகராக மாறினார், அதன் பின் K.G.F 2 வெளியான பிறகு ஆயிரம் கோடி கிளப்பில் இவரும் இணைந்தார், அதன் பிறகு இந்திய அளவில் உள்ள அரசியல் அமைப்புகள் அனைத்தும் இவரை உற்று நோக்க ஆரம்பித்தார்கள், இதை சூதரித்த யாஷ் அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் நான் யாருக்கும் சார்ந்து இல்லை என்று ஒரு அறிவிப்பை தெரிவித்தார்,
இதை கண்ட பிஜேபி, காங்கிரஸ், மாநில கட்சி அனைத்தும் இவரை சென்று நாட ஆரம்பித்து விட்டார்கள், எங்கள் கட்சிக்கு நீங்கள் ஆதரவு தெரிவிங்கள் என்று இவரை வற்புறுத்த ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் யார் அவர்கள் தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லாமல் நான் எந்த கட்சியின் சாராமல் இருப்பேன். நான் மக்களுக்காக நன்மைகளை மட்டும் செய்வன் எந்த கட்சியின் சார்ந்து இயங்க மாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவர் எந்த கட்சிக்கு ஆதரவளிப்பார் என்று பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…