தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக, பணி நிரந்தரம் மற்றும் மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த செவிலியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்தச் சூழலில், நிரந்தரப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே ஒப்பந்த செவிலியர்களுக்கும் இந்தச் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், சுமார் 270 நாட்கள் வரை ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்தக் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது ஒப்பந்த செவிலியர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…