தமிழகமெங்கும் பொங்கல் பண்டிகை மற்றும் தமிழ்ப் புத்தாண்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைய வேண்டும் என்றும், நலமும் வளமும் பெருக வேண்டும் என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்துள்ள விஜய், தனது வாழ்த்துச் செய்தியில் “வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டிருப்பது அவரது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. உழவர் திருநாளையும், தமிழ்ப் புத்தாண்டையும் ஒரே நேரத்தில் கொண்டாடும் தமிழக மக்களுக்கு, இந்த ஆண்டு ஒரு திருப்புமுனையாக அமையும் வகையில் அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன் அமையட்டும் என்று அவர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். இவ்வளவு நாள் ’ஜனநாயகன்’ பற்றி எதுவும் பேசாமல் இருந்த விஜய்யிடமிருந்து இந்த ட்வீட் வந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் சரத்குமார் தென் மாவட்டங்களில் உள்ள தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய…
தமிழக அரசியலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.…
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை தொடர்பான சட்டப் போராட்டம் தற்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. இத்திரைப்படத்திற்கு…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக,…
தமிழக அரசியலில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் எடுக்கப்போகும் அடுத்தகட்ட நகர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் மீண்டும் இணைவதற்கான கதவுகள்…
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பாசக்கார தந்தையின் நெகிழ்ச்சியூட்டும் செயல், இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வம்பன் அருகேயுள்ள கொத்தக்கோட்டை கிராமத்தைச்…