Categories: சினிமா

தயங்கிய இசையமைப்பாளர்.. பாடலின் வரியை கேட்டுவிட்டு நான் தான் பாடுவேன் என அடம் பிடித்த ஜி.வி பிரகாஷ்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் ஏ.ஆர் ரகுமான், ஜிவி பிரகாஷ், அனிருத், யுவன் சங்கர் ராஜா, இமான் ஆகியோர் தங்களது இசையால் ரசிகர்களை கட்டி போட்டுள்ளனர். அந்த வரிசையில் என்.ஆர் ரகுநந்தனும் பாடலால் ரசிகர்களை தன்வசம் ஈர்த்து வைத்துள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மூலமாக என்.ஆர் ரகுநந்தன் இசையமைப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

அடுத்தடுத்து கிருஷ்ணவேணி பாஞ்சாலை, சுந்தரபாண்டியன், நீர்ப்பறவை, மதயானை கூட்டம், மாப்பிள்ளை சிங்கம் உள்ளிட்ட படங்களுக்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் ரகுநந்தன் அளித்த பேட்டியில் கூறியதாவது, எனது மூன்றாவது படம் சுந்தரபாண்டியன். இந்த படத்தின் இயக்குனர் பிரபாகரனுக்கு தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நான் இசை அமைத்த அனைத்து பாடல்களும் மிகவும் பிடிக்கும்.

சுந்தரபாண்டியன் படத்தின் இசையமைப்பாளராக நான்தான் இருக்க வேண்டும் என அவர் ஆசை பட்டுள்ளார். இதற்காக பல இசையமைப்பாளர்களை பரிந்துரை செய்தும் அவர் ரகுநந்தன் தான் இசையமைக்க வேண்டும் என உறுதியாக இருந்துள்ளார். அதனால் தான் சுந்தரபாண்டியன் படத்திற்கு இசையமைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.

சுந்தரபாண்டியன் படம் சுமார் 150 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. படத்தை நானும் எனது நண்பர் விஜய் சேதுபதியும் தியேட்டரில் பார்த்தோம். சுந்தரபாண்டியன் படத்தில் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் பீட்சா படத்தில் நடித்த பிறகு அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறினார். நீர்ப்பறவை படத்தில் இடம்பெற்ற பற பற பறவை ஒன்று என்ற பாடலுக்கான வரிகளை வைரமுத்து தான் எழுதினார்.

நானும் அவரும் ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு சென்று விட்டோம். அங்கு வரிகளை பார்த்ததும் எனக்கு சற்று தயக்கமாக இருந்தது. பின்னர் வரிகள் பற்றியும், டியூன் பற்றியும் ஜிவி பிரகாஷிடம் சொன்னேன். அதைக் கேட்டவுடன் ஜி.வி பிரகாஷ் இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும். எனக்கு வரிகள் ரொம்ப பிடித்திருக்கிறது. நான் தான் இந்த பாடலை பாடுவேன் என அடம் பிடித்து அவரே பாடினார். நினைத்தபடி பாடலும் சூப்பர் ஹிட் ஆனது என ரகுநந்தன் கூறியுள்ளார்.

admin

Recent Posts

உடம்பே புல்லரிக்குது..! ஒரு நொடி தப்பினால் மரணம்… மின்னல் வேகத்தில் வந்த ரயில்… குழந்தையை தெய்வமாய் வந்து மீட்ட பசு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…

8 minutes ago

“உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஜி!”… பிரதமர் மோடியையே உருகவைத்த சிறுமியின் மழலை மொழி… இணையத்தை ஆக்கிரமிக்கும் சிறுமி கிரிஜாவின் கியூட் வீடியோ..!!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…

11 minutes ago

ரொம்ப ஆட்டம் போட்ட இப்படித்தான் ஆகும்…! போதையில் கார் மேல் ஏறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த ஷாக்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்..!!

மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…

28 minutes ago

பதைபதைக்கும் வீடியோ..! மரத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு… உடலில் மிளகாய்ப் பொடி தூவி ரத்தம் சொட்டச் சொட்ட கொடூரம்.. பழைய பகையை தீர்க்க இப்படியொரு கொடூரமா??

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…

32 minutes ago

“அம்மா துடிதுடிக்க செத்ததை பார்த்தேன்” குழந்தையின் கண்முன்னே… தாயை கொன்று தூக்கிலிட்ட கொடூரம்… வரதட்சணைக்காக இப்படியா..? சிறுவனின் பகீர் வாக்குமூலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…

35 minutes ago