#image_title
தமிழ் சினிமாவில் ஏ.ஆர் ரகுமான், ஜிவி பிரகாஷ், அனிருத், யுவன் சங்கர் ராஜா, இமான் ஆகியோர் தங்களது இசையால் ரசிகர்களை கட்டி போட்டுள்ளனர். அந்த வரிசையில் என்.ஆர் ரகுநந்தனும் பாடலால் ரசிகர்களை தன்வசம் ஈர்த்து வைத்துள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மூலமாக என்.ஆர் ரகுநந்தன் இசையமைப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
அடுத்தடுத்து கிருஷ்ணவேணி பாஞ்சாலை, சுந்தரபாண்டியன், நீர்ப்பறவை, மதயானை கூட்டம், மாப்பிள்ளை சிங்கம் உள்ளிட்ட படங்களுக்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் ரகுநந்தன் அளித்த பேட்டியில் கூறியதாவது, எனது மூன்றாவது படம் சுந்தரபாண்டியன். இந்த படத்தின் இயக்குனர் பிரபாகரனுக்கு தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நான் இசை அமைத்த அனைத்து பாடல்களும் மிகவும் பிடிக்கும்.
சுந்தரபாண்டியன் படத்தின் இசையமைப்பாளராக நான்தான் இருக்க வேண்டும் என அவர் ஆசை பட்டுள்ளார். இதற்காக பல இசையமைப்பாளர்களை பரிந்துரை செய்தும் அவர் ரகுநந்தன் தான் இசையமைக்க வேண்டும் என உறுதியாக இருந்துள்ளார். அதனால் தான் சுந்தரபாண்டியன் படத்திற்கு இசையமைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.
சுந்தரபாண்டியன் படம் சுமார் 150 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. படத்தை நானும் எனது நண்பர் விஜய் சேதுபதியும் தியேட்டரில் பார்த்தோம். சுந்தரபாண்டியன் படத்தில் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் பீட்சா படத்தில் நடித்த பிறகு அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறினார். நீர்ப்பறவை படத்தில் இடம்பெற்ற பற பற பறவை ஒன்று என்ற பாடலுக்கான வரிகளை வைரமுத்து தான் எழுதினார்.
நானும் அவரும் ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு சென்று விட்டோம். அங்கு வரிகளை பார்த்ததும் எனக்கு சற்று தயக்கமாக இருந்தது. பின்னர் வரிகள் பற்றியும், டியூன் பற்றியும் ஜிவி பிரகாஷிடம் சொன்னேன். அதைக் கேட்டவுடன் ஜி.வி பிரகாஷ் இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும். எனக்கு வரிகள் ரொம்ப பிடித்திருக்கிறது. நான் தான் இந்த பாடலை பாடுவேன் என அடம் பிடித்து அவரே பாடினார். நினைத்தபடி பாடலும் சூப்பர் ஹிட் ஆனது என ரகுநந்தன் கூறியுள்ளார்.
ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…