மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில், 11 வயது சிறுமி ஒருவர் தனது சொந்தத் தாயால் ₹2 லட்சம் மற்றும் நகைகளுக்கு ஈடாக விற்கப்பட்டு, 26 வயது இளைஞருடன் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2025 ஜனவரியில் அச்சிறுமியின் தந்தை இறந்த பிறகு, தாயார் பவன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். பின்னர், அந்தத் தாயும் வளர்ப்புத் தந்தையும் சேர்ந்து, திருமண ஏற்பாடு என்ற போர்வையில் குழந்தையை அந்த வாலிபருக்கு விற்றுள்ளனர். திருமணமான முதல் இரவிலேயே அந்த வாலிபரால் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி கடுமையான பயம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்கள் மௌனமாக இருந்துள்ளார். இந்த நிலையில், வளர்ப்புத் தந்தை பவன் தாயைக் கைவிட்டு ஓடியதால், அந்தத் தாய் மூன்றாவது திருமணம் செய்வதற்காக ராஜஸ்தானுக்குச் சென்றுள்ளார். போவதற்குக் முன்பு, சிறுமியை ராஜ்கரில் உள்ள மற்றொரு பெண்ணின் வீட்டில் கட்டாய வீட்டு வேலைக்கு விட்டுச் சென்றுள்ளார். அங்கு இருந்தபோதும் மற்றொரு நபரால் அச்சிறுமி பலமுறை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டுள்ளார். இதனால் கிட்டத்தட்ட ஒரு வருடமாக அச்சிறுமி தொடர்ச்சியான உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளை அனுபவித்து வந்துள்ளார்.
காவல்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், தற்போது 12 வயதாகும் அந்தச் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டு, அவருக்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்ததைத் தொடர்ந்து, ராஜ்கர் கோட்வாலி காவல்துறையினர் ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் தாய் உட்பட ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தேடும் பணியிலும், இந்த மனிதக் கடத்தல் பின்னணியில் உள்ள மற்ற நபர்களைக் கண்டறியும் விசாரணையிலும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,…
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எடுத்து வரும் அதிரடிப்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும்…
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் 15 வயது மகன் அஸ்வின்,…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (TVK) ஆட்சி அமைந்துள்ள நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத்தொகையை 2,500 ரூபாயாக…