மத்திய அரசு, மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் தகுதியான வீடுகளுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் அங்கீகாரத்தை கட்டாயமாக்கியுள்ளது. போலி இணைப்புகளைக் கண்டறிந்து நீக்கவும், உண்மையான நுகர்வோர்களுக்கு மட்டுமே அரசின் மானியப் பயன்கள் நேரடியாகச் சென்று சேர்வதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக மத்திய அரசு பலமுறை காலக்கெடுவை நீட்டித்து நுகர்வோருக்குப் போதிய கால அவகாசத்தை வழங்கியது. இந்த தொடர் காலநீட்டிப்புகளின் பயனாக, கடந்த 19-ந்தேதி நிலவரப்படி நாடு முழுவதும் சுமார் 27.43 கோடி வீட்டு உபயோக கியாஸ் நுகர்வோர்கள் தங்களது பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
இருப்பினும், வரும் 1-ந் தேதிக்குள் இந்த பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடிக்கத் தவறும் நுகர்வோருக்கு மானிய விலையிலான கியாஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, மானியம் தொடர்ந்து கிடைக்கப் பெறாத நுகர்வோர்கள் உடனடியாகத் தங்கள் கியாஸ் ஏஜென்சியை அணுகி சரிபார்ப்பை விரைவாக முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பெரும்…
தமிழ்நாட்டில் 16 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் அதிவேகமாக ஓட்டி வந்த இருசக்கர வாகனம், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த…
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பண்டிகைக் கால முன்பணமாக ரூ.20,000 வழங்கிட அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள செய்தி தொழிலாளர்கள் மத்தியில்…
விலைவாசி உயர்வால் பொதுமக்கள் சந்தித்து வரும் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், நியாயவிலைக்கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை மையங்கள் மூலமாகவே…
ஹைதராபாத் ஐஎஸ் சதன் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 3 வயதான இசானுதீன் என்ற சிறுவன், தனது பெற்றோருடன் சாட் உணவகம்…
நள்ளிரவு நேரத்தில் களைப்பாக இருந்த தாய் ஒருவர் தனது மொபைல் போனைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது சிறிய மகள் தானும்…