Categories: CINEMA

அஜித்தை பார்த்து பயந்துட்டாரா நடிகர் சூர்யா.. கங்குவா திரைப்படம் தள்ளிப்போக இதுதான் காரணமா..?

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்டோபர் 10 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் சூர்யா கடைசியாக பாண்டியராஜன் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. அதை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்தது. வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சூர்யா பத்துக்கும் மேற்பட்ட கேரக்டர்களில் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாக உள்ளதாகவும், ott-யில் 20 மொழிகளில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகின்றது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

முதலில் இந்த திரைப்படத்தை தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறியிருந்தார். அதற்குப் பிறகு திடீரென்று படத்தின் தேதியை மாற்றி இருக்கிறார்கள். அதாவது அக்டோபர் 10ஆம் தேதி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். இதற்கான காரணம் என்ன என்று பலரும் பலவிதமாக கூறி வருகிறார்கள். அதாவது தீபாவளி பண்டிகைக்கு நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக இருக்கின்றது.

இதனால் படத்தின் தேதியை மாற்றி இருக்கிறார்கள். கங்குவா பட குழுவினர் அது மட்டும் இல்லாமல் அக்டோபர் மாதத்தில் தான் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் டி ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இதைப் பார்த்த பலரும் நடிகர் சூர்யா அஜீத்தை பார்த்து பயந்துவிட்டாரா? என்று கூறி வருகிறார்கள். மேலும் ரஜினியுடன் மோதுவதற்கு தைரியம் இருக்கும் உங்களுக்கு ஏன் அஜித்துடன் மோதுவதற்கு இல்லை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் .

இதற்கு பதில் அளிக்கும் விதமாக வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் தெரிவித்ததாவது “நடிகர் சூர்யா எந்த நடிகரையும் பார்த்து பயப்படவில்லை. ஆனால் அந்த படம் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது அதிகபட்சத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் தமிழ்மொழி மட்டும் இல்லாமல் ஏகப்பட்ட மொழிகளில் வெளியாக இருப்பதால் அனைத்தையும் பார்க்கவேண்டிய சூழல் இருக்கின்றது. அதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் படக் குழுவினர் இந்த தேதியை முடிவெடுத்து அதில் படத்தை வெளியிட முடிவு செய்து இருக்கிறார்கள். அது தவிர வேறு எந்த காரணமும் கிடையாது என்று அவர் கூறியிருக்கிறார்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

பாலையா, நாகார்ஜுனாவை தொடர்ந்து.. 30 வயதிற்கும் குறைவான 2 ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்யும் பிரபல நடிகர்..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் வெங்கடேஷ் தன்னைவிட 30 வயதுக்கு குறைவான நடிகைகளுடன் நடிக்க இருப்பது குறித்து ரசிகர்கள்…

53 நிமிடங்கள் ago

வடிவேலு ஒரு Gang வச்சிருந்தாரு.. அவங்க எல்லாம் வேற யார் கூடயாவது நடிச்சா அவ்வளவுதான்.. மனம் திறந்த சிங்கமுத்து..!

நடிகர் வடிவேலு குறித்து சமீபத்திய பேட்டியில் காமெடி நடிகர் சிங்கமுத்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார். அதை இந்த தொகுப்பில்…

2 மணி நேரங்கள் ago

ராமராஜன் பட நடிகையா இது..? 54 வயதிலும் கவர்ச்சியில் காட்டும் தாராளம்.. வைரலாகும் போட்டோஸ்..!

ராமராஜன் படத்தில் நடித்த பிரபலமான நடிகை சாந்திப்பிரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த…

3 மணி நேரங்கள் ago

கல்யாணமாகி இத்தனை வருஷம் ஆயிருச்சு.. ஆனா இப்போ வரைக்கும் நகுலுக்கு என்னை பார்த்தா.. ஓப்பனாக பேசிய தேவயானி கணவர்..!!

90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. சூர்யவம்சம் படத்தில் தேவயானி நடித்துக் கொண்டிருந்தபோது விக்கிரமனியிடம்…

3 மணி நேரங்கள் ago

கல்யாணம் பண்ணிக்க பயந்து பொண்ணு தூக்கு மாட்டிக்க போயிடுச்சு.. எனக்கு கல்யாணமே நடக்காது நெனச்ச.. மனம் திறந்த பொன்னம்பலம்..!

நான் பெண் பார்க்க சென்ற போது என்னை பார்த்து பயந்து பெண் தூக்கு மாட்டிக் கொள்ள சென்று விட்டது என்று…

4 மணி நேரங்கள் ago

சினிமாவில் என்ட்ரி கொடுக்கப் போகும் மகாநதி சீரியல் நடிகை… எந்த திரைப்படத்தில் தெரியுமா..?

மகாநதி சீரியல் நடித்து வரும் நடிகைக்கு படத்தில் ஹீரோயினியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. சின்னத்திரையில் அறிமுகமாகும்…

4 மணி நேரங்கள் ago