தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றமாக, முதலமைச்சர் விஜய்யின் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிமுக மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். குறிப்பாக, 2021 மற்றும் 2026 சட்டசபை தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களால் பலவீனமடைந்துள்ள அதிமுகவில் இருந்து, முன்னாள் அமைச்சர்களும் மாஜி எம்எல்ஏக்களும் தவெகவை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில், இன்று ஒரே நாளில் மட்டும் தங்களின் ஆதரவாளர்களுடன் 60 முக்கிய நிர்வாகிகள் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர். இதில் மாஜி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பலர் அடங்குவர்.
விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அதிமுகவில் இருந்து தவெகவிற்குச் சென்ற முக்கிய மூத்த தலைவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஆரம்பத்தில் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா மற்றும் அம்பாசமுத்திரம் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்களைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதியின் முக்கிய முகமும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் மற்றும் ஆர். நடராஜ் போன்ற மூத்த நிர்வாகிகளும் தவெகவில் ஐக்கியமாகினர்.
இந்தத் தொடர் அலைகளின் உச்சகட்டமாக, இன்று ஒரே நாளில் அதிமுகவின் 4 முக்கிய முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்து எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். உடுமலைப்பேட்டை தொகுதி முன்னாள் அமைச்சரான உடுமலை ராதாகிருஷ்ணன், கடலூர் தொகுதி மாஜி அமைச்சர் எம்.சி.சம்பத், கோவில்பட்டி தொகுதி மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் முசிறி தொகுதி முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி ஆகிய நால்வரும் தங்களது ஆதரவாளர்களுடன் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். இவர்களுடன் கலசப்பாக்கம் வி. பன்னீர்செல்வம், பல்லடம் துரைமுருகன், அரக்கோணம் ரவி உள்ளிட்ட முன்னாள் எம்எல்ஏக்களும் இன்று தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதற்கு முன்னதாகவே அதிமுகவின் மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் ஆகியோர் தவெகவின் முக்கிய முகங்களாக மாறிவிட்டனர். மேலும், தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர்களான சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோரும் விரைவில் தவெகவில் இணையக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு நிலவுகிறது. அதிமுகவில் நிலவும் அங்கீகாரமின்மை மற்றும் தலைமைப் பண்பு குறைபாடே தங்களை இந்த முடிவுக்குத் தள்ளியதாக தவெகவில் இணைந்த தலைவர்கள் தெரிவித்து வரும் நிலையில், இந்த அடுத்தடுத்த கட்சித் தாவல்கள் தமிழக அரசியல் களத்தில் தவெகவின் பலத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…