டிஜிட்டல் துறையில் புதிய மைல்கல்..! வெர்ஸ் இன்னோவேஷன் நிறுவனத்தின் சுதந்திர இயக்குநராக பி.ஆர். ரமேஷ் நியமனம்..!!

Spread the love

பெங்களூருவைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி ஏஐ தொழில்நுட்ப நிறுவனமான வெர்ஸ் இன்னோவேஷன், தனது நிர்வாகக் குழுவில் பி. ஆர். ரமேஷ் அவர்களைச் சுதந்திர இயக்குநராக நியமிப்பதாக இன்று அறிவித்துள்ளது. டெயிலிஹண்ட், ஜோஷ் மற்றும் மேக்ஸ்டர் போன்ற பிரபல செயலிகளின் தாய் நிறுவனமான இது, தனது அடுத்தகட்ட வளர்ச்சி மற்றும் நிறுவனக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.

பி. ஆர். ரமேஷ் அவர்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட பட்டயக் கணக்காளர்  ஆவார். டெலாய்ட் இந்தியா (Deloitte India) நிறுவனத்தின் முன்னாள் தலைவராகவும், டெலாய்ட் குளோபல் போர்டின் முன்னாள் உறுப்பினராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். ஏர் இந்தியா, சிப்லா, நெஸ்லே இந்தியா மற்றும் லார்சன் & டூப்ரோ போன்ற இந்தியாவின் பல முன்னணி நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள இவருக்கு, 2022-23 ஆம் ஆண்டிற்கான “சிறந்த சுதந்திர இயக்குநர்” விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெர்ஸ் இன்னோவேஷன் நிறுவனத்தில், அவர் தணிக்கைக் குழுவின் தலைவராக பொறுப்பேற்பார். நிறுவனத்தின் நிதி அறிக்கைகளின் நம்பகத்தன்மை, உள்நாட்டுக் கட்டுப்பாடுகள், இடர் மேலாண்மை மற்றும் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுதல் போன்ற முக்கியமான பணிகளை அவர் மேற்பார்வையிடுவார். நிறுவனத்தின் செயல்பாட்டு ஒழுக்கத்தையும், நீண்டகால மதிப்பையும் மேம்படுத்த இவரது அனுபவம் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நியமனம் குறித்துப் பேசிய நிறுவனத்தின் இணை நிறுவனர் உமாங் பேடி, “வலுவான நிர்வாகமும் நிதி ஒழுக்கமுமே ஒரு நிறுவனத்தின் நீண்டகால வெற்றிக்கு அடிப்படை. ரமேஷ் அவர்களின் வருகை எங்கள் நிர்வாகத் தரத்தை உயர்த்துவதோடு, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்” என்று தெரிவித்தார். அதேபோல், டிஜிட்டல் துறையில் வேகமாக வளர்ந்து வரும் இந்த நிறுவனத்தில் இணைந்து, பொறுப்புடன் கூடிய வளர்ச்சியை உருவாக்கத் தான் ஆர்வமாக இருப்பதாக ரமேஷ் கூறினார்.

உள்ளூர் மொழிகளுக்கான தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் முதல் ‘யூனிகாரன்’ அந்தஸ்தைப் பெற்ற வெர்ஸ் இன்னோவேஷன் நிறுவனம், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் செக்வோயா கேபிடல் போன்ற உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களின் முதலீடுகளைப் பெற்றுள்ளது. நெக்ஸ்வெர்ஸ் ஏஐ டெயிலிஹண்ட் பிரீமியம் மற்றும் வெர்ஸ் கொலாப்போன்ற பல்வேறு ஏஐ சார்ந்த தளங்கள் மூலம், நுகர்வோர் மற்றும் பிராண்டுகள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒன்றிணைய ஒரு புதிய சூழலை இந்த நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதன் மூலம் பாரதத்தின் மூலைமுடுக்கெல்லாம் உள்ள மக்கள் தங்கள் சொந்த மொழியில் செய்திகளையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் நுகர முடிகிறது.

இந்த நிறுவனத்தின் அபரிமிதமான வளர்ச்சியை நம்பி கூகுள், மைக்ரோசாப்ட் , மற்றும் செக்வோயா கேபிடல் போன்ற உலகத்தரம் வாய்ந்த பல முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. அத்துடன் கனடா பென்ஷன் பிளான், கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) போன்ற பெரிய நிதி நிறுவனங்களும் இதில் முதலீட்டாளர்களாக உள்ளனர். இந்த வலுவான முதலீட்டுப் பின்னணி, வெர்ஸ் இன்னோவேஷன் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கும் பெரும் உறுதுணையாக உள்ளது.  செயற்கை நுண்ணறிவு மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு அவர்களின் தாய்மொழியில் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கங்களை வழங்கி வரும் இந்நிறுவனம், ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதலில் ஒரு வலுவான நிர்வாகக் கட்டமைப்பை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்கிறது.
Soundarya

Recent Posts

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

3 seconds ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

15 minutes ago

“வீட்டை விற்ற பணம் வேணும்…” பேராசையில் மனைவி… மைத்துனர், சகோதரனுடன் சேர்ந்து கணவரை கொன்று நாடகம்…. சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சூர் மாவட்டம் ம மதார்புரா பகுதியைச் சேர்ந்த 32 வயதான இஸ்மாயில் என்பவரை, அவரது வீட்டை…

20 minutes ago

“பாவம் அந்த வாயில்லா ஜீவன்…” தினமும் நாயை அடித்து சித்திரவதை செய்த நபர்…. ஆப்பு வைத்த தன்னார்வலர்கள்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள சிங்கல்பூர் கிராமத்தில், அனில் குப்தா என்பவர் தனது சொந்த வளர்ப்பு நாயை தினமும்…

27 minutes ago

ஐயோ… பாப்பாவுக்கு என்ன ஆச்சு?… படிக்கட்டில் வழுக்கி விழுந்த… 4-ஆம் வகுப்பு சிறுமி பரிதாப பலி… அதிர்ச்சியில் பெற்றோர்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகரில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் சோகச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு 4-ஆம் வகுப்பு படித்து…

28 minutes ago