பெங்களூருவைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி ஏஐ தொழில்நுட்ப நிறுவனமான வெர்ஸ் இன்னோவேஷன், தனது நிர்வாகக் குழுவில் பி. ஆர். ரமேஷ் அவர்களைச் சுதந்திர இயக்குநராக நியமிப்பதாக இன்று அறிவித்துள்ளது. டெயிலிஹண்ட், ஜோஷ் மற்றும் மேக்ஸ்டர் போன்ற பிரபல செயலிகளின் தாய் நிறுவனமான இது, தனது அடுத்தகட்ட வளர்ச்சி மற்றும் நிறுவனக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
பி. ஆர். ரமேஷ் அவர்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட பட்டயக் கணக்காளர் ஆவார். டெலாய்ட் இந்தியா (Deloitte India) நிறுவனத்தின் முன்னாள் தலைவராகவும், டெலாய்ட் குளோபல் போர்டின் முன்னாள் உறுப்பினராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். ஏர் இந்தியா, சிப்லா, நெஸ்லே இந்தியா மற்றும் லார்சன் & டூப்ரோ போன்ற இந்தியாவின் பல முன்னணி நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள இவருக்கு, 2022-23 ஆம் ஆண்டிற்கான “சிறந்த சுதந்திர இயக்குநர்” விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெர்ஸ் இன்னோவேஷன் நிறுவனத்தில், அவர் தணிக்கைக் குழுவின் தலைவராக பொறுப்பேற்பார். நிறுவனத்தின் நிதி அறிக்கைகளின் நம்பகத்தன்மை, உள்நாட்டுக் கட்டுப்பாடுகள், இடர் மேலாண்மை மற்றும் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுதல் போன்ற முக்கியமான பணிகளை அவர் மேற்பார்வையிடுவார். நிறுவனத்தின் செயல்பாட்டு ஒழுக்கத்தையும், நீண்டகால மதிப்பையும் மேம்படுத்த இவரது அனுபவம் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நியமனம் குறித்துப் பேசிய நிறுவனத்தின் இணை நிறுவனர் உமாங் பேடி, “வலுவான நிர்வாகமும் நிதி ஒழுக்கமுமே ஒரு நிறுவனத்தின் நீண்டகால வெற்றிக்கு அடிப்படை. ரமேஷ் அவர்களின் வருகை எங்கள் நிர்வாகத் தரத்தை உயர்த்துவதோடு, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்” என்று தெரிவித்தார். அதேபோல், டிஜிட்டல் துறையில் வேகமாக வளர்ந்து வரும் இந்த நிறுவனத்தில் இணைந்து, பொறுப்புடன் கூடிய வளர்ச்சியை உருவாக்கத் தான் ஆர்வமாக இருப்பதாக ரமேஷ் கூறினார்.
உள்ளூர் மொழிகளுக்கான தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் முதல் ‘யூனிகாரன்’ அந்தஸ்தைப் பெற்ற வெர்ஸ் இன்னோவேஷன் நிறுவனம், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் செக்வோயா கேபிடல் போன்ற உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களின் முதலீடுகளைப் பெற்றுள்ளது. நெக்ஸ்வெர்ஸ் ஏஐ டெயிலிஹண்ட் பிரீமியம் மற்றும் வெர்ஸ் கொலாப்போன்ற பல்வேறு ஏஐ சார்ந்த தளங்கள் மூலம், நுகர்வோர் மற்றும் பிராண்டுகள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒன்றிணைய ஒரு புதிய சூழலை இந்த நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதன் மூலம் பாரதத்தின் மூலைமுடுக்கெல்லாம் உள்ள மக்கள் தங்கள் சொந்த மொழியில் செய்திகளையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் நுகர முடிகிறது.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…