BREAKING: பிரபல வேகபந்து வீச்சாளர் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகம்…!

Spread the love

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷாபூர் சத்ரான் (38), அரிய வகை நோய் பாதிப்பு காரணமாக இந்தியாவில் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 07) காலமானார். நாளை தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்த நிலையில், அதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக அவர் உயிரிழந்திருப்பது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஷாபூர் சத்ரான் ‘ஹீமோபாகோசைடிக் லிம்போஹிஸ்டியோசைட்டோசிஸ்’ (HLH) என்ற உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைக் கடுமையாகப் பாதிக்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காகக் கடந்த அக்டோபர் மாதம் முதல் நொய்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மே மாதம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரங்களான முகமது நபி மற்றும் ரஷித் கான் ஆகியோர் நேரில் சென்று அவரைச் சந்தித்து நலம் விசாரித்திருந்த நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி, தனது எக்ஸ் (X) பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. “மிகுந்த மனவருத்தத்துடனும், ஆழ்ந்த துயரத்துடனும் ஆப்கானிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் சத்ரானின் மறைவை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துக் கொள்கிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2020 வரை விளையாடிய சத்ரான், ஆப்கானிஸ்தான் அணி முதன்முறையாக ஐசிசி உலகக் கோப்பைத் தொடர்களுக்குத் தகுதி பெற்று உலக அரங்கில் கால்பதித்ததில் முக்கியப் பங்காற்றியவர். ஆப்கான் கிரிக்கெட்டின் ஆரம்பக் காலகட்டத் தூணாக விளங்கிய அவரது மறைவிற்குச் சக கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

SATHISH R

Recent Posts

ஐயோ… லாரி மோதி பள்ளி மாணவிகள் இரண்டு சகோதரிகள்… சம்பவ இடத்திலேயே பலி… ஹரியானாவில் நேர்ந்த சோகம்…!

ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் நேற்று காலை நேர்ந்த கோர சாலை விபத்தில், பள்ளிக் கல்வி பயின்று வந்த இரண்டு…

2 minutes ago

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

9 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

9 மணத்தியாலங்கள் ago