புதுக்கோட்டை அருகே கீரனூர் -நார்த்தமலை சாலையில் மலை மாதா கோவிலுக்கு அருகே சிறிய ரக விமானம் ஒன்று திடீரென்று சாலையில் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதை கண்டு வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீரனூர் சாலையில் விமானம் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சிறிய ரக விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது முன் பகுதி சேதமடைந்த காரணத்தால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சாலை போக்குவரத்து இருந்த நேரத்தில் விமானம் தரையிறங்கிய நிலையில் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. விமானத்தில் இருந்த பயிற்சி விமானி இருவர் மீட்க பட்டு காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த விமானப்படை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுக்கோட்டை – திருச்சி நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென்று சாலையில் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…
அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…