மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் உள்ள எம்.ஒய் (MYH) அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஒரு வயதுக் குழந்தையின் தொண்டையில் சிக்கியிருந்த 3 அங்குல நீளமுள்ள உயிருள்ள மீனை வெற்றிகரமாக அகற்றி உலகையே வியக்க வைத்துள்ளனர். மீன் தொட்டியைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ‘கௌராமி’ வகை மீன் ஒன்று குழந்தையின் வாய்க்குள் சென்று தொண்டைப் பகுதியில் சிக்கிக்கொண்டது. இதனால் மூச்சுவிட முடியாமல் திணறிய அக்குழந்தையின் உடல் ஆக்சிஜன் குறைபாட்டால் நீல நிறமாக மாறியதுடன், வாயிலிருந்து இரத்தமும் வெளியேறியதால் நிலைமை மிகவும் கவலைக்கிடமானது.
மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட குழந்தையின் நிலையை உணர்ந்த காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் டாக்டர் யாமினி குப்தா தலைமையிலான குழுவினர், உடனடியாகச் சவாலான அறுவை சிகிச்சையைத் தொடங்கினர். தொண்டைக்குள் மீன் உயிருடன் இருந்ததால், அதன் துடுப்புகள் குழந்தையின் மூச்சுக்குழாயைக் கிழித்துவிடக்கூடும் என்ற பெரும் ஆபத்து நிலவியது. இருப்பினும், மருத்துவர்கள் எண்டோஸ்கோபி முறையைப் பயன்படுத்தி மிகுந்த நிபுணத்துவத்துடன் அந்த மீனை உயிருடன் வெளியேற்றினர். இந்த அரிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை அபாயக் கட்டத்தைத் தாண்டி தற்போது நலமுடன் உள்ளது.
இது குறித்துப் பேசிய மருத்துவர் யாமினி குப்தா, மத்திய இந்தியாவில் இவ்வளவு சிறிய குழந்தையின் தொண்டையில் உயிருள்ள மீன் சிக்கியது இதுவே முதல்முறை என்று தெரிவித்தார். இது வெறும் அறுவை சிகிச்சை மட்டுமல்லாமல் தங்களின் மருத்துவத் திறமைக்கான ஒரு பெரும் சோதனை என்றும் அவர் குறிப்பிட்டார். சிறு குழந்தைகளின் சுவாசப் பாதைகள் மிகவும் குறுகலாக இருப்பதால், பெற்றோர்கள் குழந்தைகளைக் கையாளும்போதும் அவர்களுக்கு அருகில் சிறு பொருட்களை வைக்கும்போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவம் மருத்துவர்களின் அசாத்திய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அரசியல் சூழல் பரபரப்படைந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள…
தூத்துக்குடியில் கைதாகி மரணமடைந்த அருணாச்சலம் என்ற கைதியின் உயிரிழப்பு குறித்து, காவல்துறையினரால் தாக்கப்பட்டதாலேயே அவர் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் மற்றும்…
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம், பத்லாபூர் சிர்காவ் பகுதியில் வசித்து வந்தவர் ஹரி ராம் சிங் (35). இவரது மனைவி…
நீட் மற்றும் பிற தகுதித்தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவி பெரும்…
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று, கடந்த 21-ஆம் தேதியே தனது பதவியை…
கொழுக்குமலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கார்த்திக்(31) என்பவர், எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து சுமார் 500…