திரை உலகைப் பொறுத்தவரை ஒரு படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என்றால் கதை கதையில் நடிப்பவர்கள் மற்றும் படத்தில் இடம்பெறும் பாடல்கள் ஒளிப்பதிவு என ஒவ்வொன்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும்.
எவ்வளவுதான் நாயகர்களும் நாயகிகளும் தங்கள் திறமையை வெளிக்காட்டி நடித்தாலும் படத்தின் பாடல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த ப் பாடல்களை எழுதும் பாடல் ஆசிரியர்கள் என்றும் தங்களின் வரிகளால் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காமல் இடம் பிடிப்பார்கள்.
அப்படி அன்றும் இன்றும் தனது பாடல் வரிகளால் ரசிகர்களிடையே நிலைத்து நிற்கும் ஒருவர் தான் கவிஞர் வாலி. 1958 ஆம் வருடம் வெளியான அழகர்மலைக் கள்வன் என்ற திரைப்படத்திற்காக வாலி தனது முதல் பாட்டை எழுதினார். அதன் பிறகு திரை உலகில் நான்கு தலைமுறையாக வந்த நடிகர் நடிகைகளுக்கு வாலி பாடல் எழுதிக் கொடுத்துள்ளார்.
அவ்வகையில் சுமார் 15,000 பாடல்களை வாலி எழுதியுள்ளார். அவரது கவித்திறனை பாராட்டி பத்மஸ்ரீ விருதும் தேசியகவி பாரதியார் விருதும் வழங்கப்பட்டது. அதேபோன்று பாரத விலாஸ் திரைப்படத்திற்காக அவர் எழுதிய இந்திய நாடு என் வீடு என்ற பாடலுக்கு அவருக்கு தேசிய விருது வழங்க அரசு முன் வந்தது. ஆனால் அதனை வாலி ஏற்க மறுத்துவிட்டார்.
எத்தனையோ பாடல்களை எழுதி லட்சக்கணக்கில் வாலி சம்பாதித்து இருக்கலாம். ஆனால் அவர் முதல் முதலில் வாங்கிய சம்பளம் என்ன என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. தனது முதல் சம்பளமாக வாலி 75 ரூபாயை வாங்கியுள்ளார்.
நடிகை வரலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி…
சண்முக பாண்டியன் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…