ஆக்ராவில் 28 வயது பெண் மருத்துவர் ஒருவர் தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த டாக்டர் வர்த்திகா, ஆக்ராவிலுள்ள மனநல நிறுவனம் மற்றும் மருத்துவமனையில் (IMHH) எம்.டி (MD) படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது தாய் நீண்ட நேரமாக போன் செய்தும் வர்த்திகா எடுக்காததால், உடன் படிக்கும் சக மாணவர் சித்தார்த் சர்மாவிற்கு தகவல் தெரிவித்தார். சித்தார்த் அங்கு சென்று பார்த்தபோது அறை உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், மயக்க நிலையில் இருந்த வர்த்திகாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்தத் தற்கொலைக்கு கடந்த சில மாதங்களாக அவர் அனுபவித்த மன உளைச்சலே காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம், வர்த்திகா தனது சீனியர் மருத்துவர் ஒருவர் மீது தவறான முறையில் நடந்துகொண்டதாகப் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை நடத்தியது, ஆனால் புகாரில் போதிய ஆதாரங்கள் இல்லை என முடிவானது. இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த வர்த்திகா, விசாரணைக்குப் பிறகு பெரும் பாதிப்புக்குள்ளாகி இருந்ததாகத் தெரிகிறது. ஒரு இளம் மருத்துவர் பாலியல் அத்துமீறல் புகார் அளித்தும் நீதி கிடைக்காத விரக்தியில் இந்த முடிவை எடுத்துள்ளது மருத்துவ உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுச்சேரி அரசியலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அமைச்சரவை பங்கீடு தொடர்பாக மோதல் வெடித்துள்ள நிலையில், முதல்வர் ரங்கசாமி எடுத்துள்ள…
தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ஆளுநர் சந்திப்புகள், தற்போது சட்டப் போராட்டத்தை…
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்த வரலாறு காணாத தோல்விக்குத் பொறுப்பேற்று, அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைத்திலிங்கம்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியலில் 'கூட்டணி' யுத்தம் உச்சகட்டத்தை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்குள்ளும், மாநில அரசியலிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் அங்கம்…