நடிகர் பப்லு பிரித்விராஜ் தனது காதலியான ஷீத்தல் என்பவரை பிரிந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர்கள் மீண்டும் இணைந்துவிட்டதை அவர்கள் எடுத்த செல்பி உறுதி செய்கிறது.தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகர் பப்லு பிரித்விராஜ். அவர் ஹீரோவாக நடிக்க முயற்சி செய்து வாய்ப்பு கிடைக்காததால் இரண்டாம் நடிகராக பல படங்களில் நடித்து பிரபலமானவர்.
இவர் அஜித் ,விஜய் என பல முன்னணி நடிகளுடனும் நடித்துள்ளார். பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. இதனால் அவர் நடத்திவந்த ஹோட்டல் பிசினசை கவனித்து வந்த நிலையில் சீரியல்களில் அப்பா கதாப்பத்திரத்திலும் நடித்துவந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 30 ஆண்டுகள் ஆனநிலையில் ஆட்டிசம் குறைபாடுள்ள 24 வயது மகன் இருக்கிறார். தனது மனைவியுடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஏற்ப்பட்டது.
இந்நிலையில் ஷீத்தல் என்ற இளம்பெண்ணுடன் நட்பு ஏற்ப்பட்டு பின்பு காதலாகா மாறியது. சமூக வலைதளங்களில் ரீல்ஸ்கள் மூலம் தனது காதலை வெளிபடுத்திவந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது .சமீபத்தில் அவர்கள் இருவருக்கு ஏற்ப்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரித்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் நடிகர் பப்லு பேட்டி ஒன்றில் இதனை உறுதி செய்தார்.
பப்லு மீண்டும் தனது காதலியான ஷீத்தல் என்பவருடன் இணைத்துள்ளார் . அவர் ரன்பீர் கபூர், ரஷ்மிகா நடிப்பில் வெளியான ANIMAL என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படத்தின் வெற்றி விழா மும்பையில் நடந்தது. இதில் நடிகர் பப்லு ரன்வீர் கபூர்,ரஷ்மிகா மற்றும் ஷீத்தலுட எடுத்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருவது இவர்கள் மீண்டும் இணைந்ததை இந்த செல்ஃபி உறுதிசெய்கிறது.