தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி சமூக வலைதளங்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை (Exit Polls) வெளியிடுபவர்களுக்கு எதிராக இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) தற்போது கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் நடைமுறைகள் நிறைவடையும் வரை, அதாவது மாலை 6:30 மணி வரை எந்தவொரு ஊடகமோ அல்லது தனிநபரோ கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடக்கூடாது என்று ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இருப்பினும், முகநூல் மற்றும் எக்ஸ் (X) போன்ற சமூக வலைதளங்களில் விதிகளுக்குப் புறம்பாகப் பகிரப்படும் தரவுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாகக் கருதப்படும் என்றும், இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 126A-ன் கீழ் சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது. வாக்காளர்களின் மனநிலையைத் தவறாக வழிநடத்துவதைத் தவிர்க்கவும், தேர்தல் நேர்மையைப் பாதுகாக்கவும் இந்தத் தடை மிக அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…