தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைத்து வருகிறது. இதில் செந்தில் பாலாஜியின் பங்கு என்பது சற்று அதிகமாகவே உள்ளது.
இப்படியான நிலையில் கரூரில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் எம் ஆர் விஜயபாஸ்கர் இருவரும் மாறி மாறி மாற்றுக் கட்சியினரை தங்கள் வசம் இழுத்து வரும் நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி கரூரை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் திமுகவில் இணைந்ததாக செந்தில் பாலாஜி தனது SM இல் பதிவிட்டிருந்தார். உதவி செய்வதாக அழைத்துச் சென்று திமுக துண்டு போட்டு போட்டோ எடுத்ததாகவும் அவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்ததாகவும் அதிமுக தரப்பு புதிய போட்டோவை வெளியிட்டுள்ளது. இது செந்தில் பாலாஜிக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
