திருமணமாகி கணவருடன் வசித்து வந்த பெண் ஒருவர், தனது முன்னாள் காதலனை உல்லாசமாக இருக்கலாம் என ஆசைவார்த்தை கூறி ஹோட்டலுக்கு வரவழைத்து, தனது கணவருடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமணத்திற்கு முன்பு இருவரும் தீவிரமாக காதலித்ததாகவும், அப்போது எடுக்கப்பட்ட தங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காதலனின் செல்போனில் இருந்ததாகவும் அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்தப் புகைப்படங்களை வைத்து அவர் தன்னை மிரட்டியதாகவும், கடந்த ஒரு மாதமாக ஹோட்டலுக்கு வரும்படி வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காதலனின் மிரட்டலுக்குப் பணிந்து, தனது கணவருக்குத் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு அந்தப் பெண் ரகசியமாகச் சென்று அவரைச் சந்தித்து வந்துள்ளார். ஆனால், காதலன் தினமும் அழைக்கத் தொடங்கியதால் சந்தேகமடைந்த கணவரிடம் அந்தப் பெண் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து கணவன் மற்றும் மனைவி இருவரும் இணைந்து ஒரு திட்டத்தைத் தீட்டினர். அதன்படி, மீண்டும் காதலனை ஹோட்டலுக்கு வரவழைத்து, அங்கிருந்த கற்கள் மற்றும் கட்டைகளால் கொடூரமாகத் தாக்கி அவரைக் கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் எஸ். கீர்த்தனா, மிகச் சரளமான ஹிந்தியில் பேசும் வீடியோ…
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் நடைபெற்ற திருமண விழாவில், மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளும் 'வர்மாலா'…
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகளான CPI மற்றும் CPM அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள்…
சமீபகாலமாக வினோதமான 'ஃபுட் ஃப்யூஷன்' வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது வழக்கமாகிவிட்டது. அந்த வரிசையில், தற்போது கரும்புச் சாற்றில் மட்டர் பன்னீர்…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்…
திருமண உறவுகளையும் குடும்ப கௌரவத்தையும் சுக்குநூறாக உடைக்கும் வகையில், 28 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது 18 வயது…