உலக மாநாட்டிற்கு நடுவே தலைநகரைக் கைப்பற்றிய ராணுவம்..! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு… பின்னணி என்ன..?

Spread the love

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ‘பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்’ (PTI) கட்சித் தொண்டர்கள் நடத்தி வரும் தொடர் மெகா போராட்டங்கள் மற்றும் வன்முறை காரணமாகத் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி ஆகிய பகுதிகள் கடுமையான கலவரக் காடாக மாறியுள்ளன. வன்முறை மோதல்கள், துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப் புகைக் குண்டு வெடிப்புகள் மற்றும் மொபைல்-இணையச் சேவைகள் முடக்கம் எனச் சூழல் அசுர வேகத்தில் மோசமடைந்து வருகிறது. இதனால், அங்குள்ள உள்ளூர் போலீசாரால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த அசாதாரண சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர, பாகிஸ்தான் அரசு தலைநகர் இஸ்லாமாபாத்தின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பையும் நேரடியாக ராணுவத்திடம் ஒப்படைத்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. வரும் அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இஸ்லாமாபாத்தில் உலக நாடுகள் உற்றுநோக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்தச் சர்வதேச மாநாட்டின் போது இம்ரான் கான் ஆதரவாளர்களால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அது உலக அரங்கில் பாகிஸ்தானுக்குப் பெரும் அவமானத்தைத் தேடித்தரும் என்பதால், பல மாதங்களுக்கு முன்பே ராணுவத்தைக் களமிறக்கிப் போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த SCO உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உட்படப் பல உலகத் தலைவர்கள் பாகிஸ்தான் செல்லவுள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வெளியுறவு அமைச்சர் ஒருவர் பாகிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். இத்தகைய மிக முக்கியமான மற்றும் பதற்றமான சூழ்நிலையில், உலகத் தலைவர்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அரசு இருப்பதால் இந்த ராணுவப் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Swetha

Recent Posts

BIG BREAKING: அண்ணாமலை விலகல்..? பாஜகவில் பெரும் பரபரப்பு..!!!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பா.ஜ.க கட்சியிலிருந்து விலகப்போவதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்…

1 minute ago

என்னது இது..? பிளிங்கிட்டில் ஆர்டர் செய்த பொருளைப் பார்த்ததும் புத்தி மாறிய டெலிவரி பாய்.. பெண் வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!!

ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு, டெலிவரி ஊழியரால் நேர்ந்த…

7 minutes ago

பரிட்சை எழுத வந்த இடத்தில் இப்படியா..? கால்வாயின் மேல்தளம் உடைந்து.. 25 மாணவர்கள் உள்ளே விழுந்த சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பி.எட். நுழைவுத் தேர்வு மையத்திற்கு வெளியே, சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மூடி உடைந்ததில்…

10 minutes ago

“அப்பா என் புருஷன் வீட்டில் பிரச்னை வந்தா” மகள் கேட்ட அந்த ஒரு கேள்வி… சொல்வதறியமால் கண்ணீர் விட்ட பெற்றோர்கள்…!!

தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…

19 minutes ago

அதிமுக தொண்டர் தற்கொலை.. “பிளீஸ் இனி யாரும் இப்படி செய்யாதீங்க” நா தழுதழுக்க பேசிய எடப்பாடி பழனிச்சாமி…!!

"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…

25 minutes ago