ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்காக உழைத்த மூத்த நிர்வாகிகளையும் விசுவாசிகளையும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முறைப்படி மதிக்கத் தவறிவிட்டார் எனப் பிரபல திரைப்பட இயக்குநரும் முன்னாள் அதிமுக உறுப்பினருமான R.V. உதயகுமார் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்சியின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்காற்றிய தன்னை போன்ற உண்மையான தொண்டர்களைக் கண்டு கொள்ளாமல் புறக்கணித்ததே, இன்று அதிமுக சந்தித்து வரும் தொடர் வீழ்ச்சிக்கு முதன்மையான காரணம் எனத் தெரிவித்துள்ள அவர், சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
உண்மை விசுவாசிகளை வளர்த்து விடாமல் ஒதுக்கித் தள்ளியதன் விளைவாகவே அக்கட்சி தனது செல்வாக்கை இழந்து நிற்பதாக அவர் வெளியிட்டுள்ள கருத்துகள், தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
ஊழலற்ற நிர்வாகமே இலக்கு எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்து வரும் நிலையில், அவர் வசம் உள்ள…
திமுக எம்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று சந்திக்காதது கட்சியினரிடையே…
அதிமுகவிற்குள் உட்கட்சிப் பூசல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதை உணர்த்தும் வகையில் முக்கிய மூத்த தலைவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன்…
ஓலைக்குடா அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள…
நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய நாடாளுமன்றத்தை…
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் தாடியால் கிராமத்தைச் சேர்ந்த முகமது நசாகத் என்பவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு…