ராயப்பேட்டையில் புதிய வீட்டிற்கு பால் காய்ச்சிய இபிஎஸ்…! 15 வருடம் கழித்து அரசு  பங்களாவை காலி செய்தது ஏன்..?

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள ‘செம்பருத்தி’ என்ற அரசு பங்களாவை காலி செய்துவிட்டு, ராயப்பேட்டையில் உள்ள புதிய வீட்டிற்கு குடிபெயர உள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு அமைச்சராக பொறுப்பேற்ற போது இந்த அரசு பங்களாவிற்குள் குடிபுகுந்த அவர், சுமார் 15 ஆண்டுகள் அங்கு வசித்து வந்தார். இந்த காலகட்டத்தில் அவர் அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுகவின் பொதுச்செயலாளர் என பல முக்கிய அரசியல் பொறுப்புகளை இந்த வீட்டில் இருந்தபடியே வகித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதால், அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைக்கவில்லை. இந்த சிறப்பு அந்தஸ்து இல்லாத காரணத்தினால், விதிகளின்படி அரசு பங்களாவை காலி செய்ய வேண்டிய சூழ்நிலை எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எதிரே, பிரபல தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான வீட்டிற்கு மாற முடிவு செய்தார்.

சுபமுகூர்த்த நாளான இன்று அதிகாலையிலேயே எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் ராயப்பேட்டையில் உள்ள புதிய வீட்டிற்கு வருகை தந்து, அங்கு பாரம்பரிய முறைப்படி பால் காய்ச்சி புதுமனை புகுவிழா நடத்தினார். அவரது அரசியல் வாழ்வின் முக்கிய அடையாளமாக விளங்கிய அரசு பங்களாவை காலி செய்துவிட்டு, தற்போது கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு மிக அருகிலேயே அவர் குடிபெயர்ந்திருப்பது அதிமுகவினர் இடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

Swetha

Recent Posts

“போலீஸ் அடித்துதான் என் மகன் இறந்தான்”… பெற்றோர் கதறல்… தூத்துக்குடி சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி…. டிஎஸ்பி சுனில் கொடுத்த பரபரப்பு விளக்கம்…!

தூத்துக்குடியில் கைதாகி மரணமடைந்த அருணாச்சலம் என்ற கைதியின் உயிரிழப்பு குறித்து, காவல்துறையினரால் தாக்கப்பட்டதாலேயே அவர் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் மற்றும்…

8 minutes ago

“புடவை வாங்கித் தரலையா?”….குக்கர் மூடியை கையில் எடுத்த மனைவி… மாடியில் கதறி அழுத 7 வயது சிறுவன்… அடுத்து நடந்த அதிர வைக்கும் சம்பவம்…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம், பத்லாபூர் சிர்காவ் பகுதியில் வசித்து வந்தவர் ஹரி ராம் சிங் (35). இவரது மனைவி…

18 minutes ago

BREAKING: நீட் தேர்வில் மிகப்பெரிய மாற்றம்?…. சற்றுமுன் பிரதமர் மோடி வெளியிட்ட அந்த ஒரு முக்கிய அறிவிப்பு….!

நீட் மற்றும் பிற தகுதித்தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவி பெரும்…

28 minutes ago

BREAKING: “நான் பதவி விலகுகிறேன்”…. பரவும் கடிதமும்.. டெல்லியில் சூடுபிடிக்கும் போராட்டமும்…. சற்றுமுன் பரபரப்பு….!

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று, கடந்த 21-ஆம் தேதியே தனது பதவியை…

36 minutes ago

மரணத்தின் விளிம்பில் போராட்டம்…! 500 அடி பள்ளத்தில் விழுந்த சென்னை சுற்றுலாப் பயணி… கொழுக்குமலை டிரெக்கிங்கில் கொடூர விபத்து…!!

கொழுக்குமலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கார்த்திக்(31) என்பவர், எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து சுமார் 500…

38 minutes ago

திடீரென முடக்கப்பட்ட மெரினா…. அலர்ட்டான போலீஸ்…. பொதுமக்கள் உள்ளே செல்லத் தடை… சென்னையில் உச்சகட்ட பரபரப்பு….!

சென்னை மெரினா கடற்கரையில் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் திரளக் கூடும் என்ற ரகசியத் தகவலின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப்…

42 minutes ago