தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தன்னுடைய பிரச்சார பயணத்தை நேற்று தொடங்கினார். மேட்டுப்பாளையம் பகுதியில் ரோடு சோவில் பங்கேற்ற அவர் பிரச்சார வேனில் நின்றவாறு பொதுமக்களிடம் பேசினார். அப்போது, அதிமுக கூட்டணிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு என்பது வெள்ளத்தில் நீந்தி வந்து பிரச்சாரம் செய்யும் அளவுக்கு உள்ளது.
கோவை மக்களின் இந்த ஆதரவை பார்த்திருந்தால் முதல்வருக்கு கலக்கம் ஏற்பட்டிருக்கும். இதன் மூலம் வருகின்ற சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்பது உறுதியாகி உள்ளது. மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும், தீய சக்தி திமுகவை அடுத்த ஆண்டு தேர்தலில் வீழ்த்துவோம், வெற்றி பெறுவோம், நல்லாட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவோம். கூட்டணிக்கு அதிமுகவை பாஜக அடிப்படையை செய்தது என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.
அவருக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். 2001 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது என்பது வரலாறு. திமுகவுடன் சேர்ந்தால் பாஜக நல்ல கட்சி, அதுவே அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் பாஜக மதவாத கட்சி. இதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. நாட்டுக்கு நல்ல திட்டங்கள் தரும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு. திமுகவை பொருத்தவரை குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும். அதன் மூலம் கொள்ளையடிக்க வேண்டும். இதுதான் திமுகவின் குறிக்கோள் என்று இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…