ரிடையர்மென்ட் பார்ட்டிக்கு பதில் டிஸ்மிஸ்…! ஓய்வுபெறும் நாளில் ஊழியருக்கு நேர்ந்த கதி…. கீழக்கரையில் பரபரப்பு…!!

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த ஐயப்பன் என்பவர், தனது பணிக்காலம் முடிந்து நாளை (மார்ச் 31) ஓய்வுபெற இருந்தார். இந்நிலையில், அவரது பணி ஓய்வு தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் இறுதி கட்டமாகச் சரிபார்த்தபோது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியானது. அவர் பணியில் சேர்ந்தபோது சமர்ப்பித்த எட்டாம் வகுப்பு கல்விச் சான்றிதழ் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பிராமணக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பள்ளி, அது தொடங்கப்பட்ட 1968 முதல் இன்று வரை தொடக்கப்பள்ளியாக (5-ஆம் வகுப்பு வரை) மட்டுமே இருந்து வரும் நிலையில், அவர் அங்கிருந்து எட்டாம் வகுப்பு சான்றிதழ் பெற்றது அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய விரிவான விசாரணையில், ஐயப்பன் தாக்கல் செய்தது முற்றிலும் போலியான சான்றிதழ் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வட்டாரக் கல்வி அலுவலரின் பரிந்துரையின் பேரில், கீழக்கரை நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். நாளை பணி நிறைவு பெற்று ஓய்வூதியப் பலன்களைப் பெறவிருந்த நிலையில், ஐயப்பனை நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். முப்பதாண்டு காலப் பணிக்குப் பிறகு, ஓய்வுபெறும் கடைசி நாளில் மோசடி அம்பலமாகி வேலை பறிபோன சம்பவம் நகராட்சி ஊழியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

38 seconds ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

11 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

13 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

18 minutes ago

“என்ன கொடுமை சார் இது..!” தலையில் வாட்டர் டேங்க்கோடு சுற்றும் மாடு… என்ன காரணம் தெரியுமா..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…

23 minutes ago