கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இதோடு அதிமுக முடிந்துவிடும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால் அவருடைய பகல் கனவு ஒருபோதும் பலிக்காது . நாட்டை காப்பதற்கு ராணுவம் போல அதிமுகவை வெற்றி பெற செய்ய சிப்பாய்களாக தொண்டர்கள் இருக்கிறார்கள். எடப்பாடி பொறுப்பு ஏற்ற பிறகு 10 தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து விட்டது என்று ஸ்டாலின் பேசுகிறார். ஆனால் 2011 முதல் 2021 வரை எத்தனை முறை திமுக தோல்வி அடைந்தது என்பதை அவர் யோசித்துப் பார்க்க வேண்டும்.
2011 ஆம் வருடம் எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாமல் போனது திமுக. 2021 இல் மக்களை ஏமாற்றுவதற்காக 500க்கும் மேலான அறிவிப்புகளை வெளியிட்டார்கள். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது திமுக. திமுக அமைச்சர்கள் மீது உள்ள அனைத்து ஊழல் வழக்குகளும் அதிமுக ஆட்சி அமைந்ததும் விரைந்து விசாரிக்கப்படும். ஒருவரையும் விடமாட்டோம். வேண்டுமென்றே பொய் வழக்கு போடுவது, அதிமுகவை அவதூராக பேசுவது எல்லாம் வேடிக்கை பார்க்க வேண்டுமா? வேடிக்கை பார்த்த காலம் மாறிவிட்டது. அன்று இருந்த பழனிச்சாமி வேறு. இனி பார்க்க போகிற பழனிசாமி வேறு” என்று பேசி உள்ளார்.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…
தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்…
பீகார் அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குடும்பப் பூசலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தனது சித்தப்பா…