#image_title
மெல்லத் திறந்தது கதவு, நான் பாடும் பாடல், அம்மன் கோவில் கிழக்காலே, ராஜாதி ராஜா போன்ற பல வெற்றிப்படங்களை தந்தவர் இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன். ஒரு காலகட்டத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கவும் துவங்கினார். திருமதி பழனிசாமி, அமைதிப்படை, தசாவதாரம், என் புருஷன் குழந்தை மாதிரி, சூரிய வம்சம், நட்புக்காக போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அப்பா, அண்ணன், மாமா போன்ற கேரக்டரில் அவரது நடிப்பும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
இயக்குநர் மற்றும் நடிகர் ஆர் சுந்தர்ராஜனின் மனைவியும் சினிமா கலைஞர்தான். அவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பிரபல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்த துர்கா தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நதியா, மனிஷா கொய்ராலா, சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், ரேகா, ஜெயசுதா உள்ளிட்ட பல நடிகைகளுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பேசி இருக்கிறார். அதுபோல் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி ஆர்ட்டிஸ்ட் பலருக்கும் துர்கா அதே போன்ற மழலை குரலில் டப்பிங் பேசியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை 5000 படங்களுக்கு மேல் டப்பிங் பேசியிருக்கிறார் துர்கா.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் துர்கா சுந்தர்ராஜன் கூறியதாவது, எங்களுக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்த நிலையில், அவரும் பயங்கர பிஸியாக இருந்தார். நானும் பல படங்களில் கமிட் ஆகி டப்பிங் பேசுவதில் பிஸியாக இருந்தேன். அவர் கோயம்புத்தூர், கொடைக்கானல், ஊட்டி என வெளியூர்களுக்கு மாதக்கணக்கில் சென்றுவிடுவார். சென்னை வரும்போது மட்டும் தான் நாங்கள் சந்திப்போம். அதுவும் வீட்டில் இருந்து காரில் அவர் நான் டப்பிங் பேசும் ஸ்டுடியோவுக்கு வந்துவிடுவார்.
பிறகு என்னை காரில் அழைத்துக்கொண்டு பேசிக்கொண்டே போவார். நானும் பிள்ளைகள் படிப்பு, வீட்டு செலவு, அவர் ஷூட்டிங் சென்றது முதல் இதுவரை நடந்த குடும்ப விஷயங்கள், என் பணி சார்ந்த விஷயங்கள் என பேசுவேன். அதே போல் அவரும் பல தகவல்களை என்னிடம் பரிமாறிக்கொள்வார். பிறகு விமானத்துக்கு செல்ல அவர் கிளம்பி விடுவார். இப்படித்தான் 10 ஆண்டுகளாக நாங்கள் காரில் குடும்பம் நடத்தினோம் என்று கூறியிருக்கிறார் துர்கா சுந்தர்ராஜன்.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்த 35 வயது இளம்பெண் ஒருவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு…
தமிழக அரசியல் களத்தில் புதிய கூட்டணி நகர்வுகள் குறித்த பேச்சுகள் சூடுபிடித்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும்…
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும்…
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டத்தின் பின்னணியில் அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி…
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப்…