நடிகர் விஜயகாந்த் புரட்சிக்கலைஞர் என்று துவக்கத்தில் அழைக்கப்பட்டு, பின்னர் கேப்டன் என்ற பெயருக்கு சொந்தக்காரர் ஆனார். இறக்கும்வரை கேப்டன் என்ற பெயர்தான் அவருக்கு நிலைத்தது. ஆஜானுபாகுவான தோற்றமும், கம்பீரமான குரலும் கொண்ட விஜயகாந்த், கடைசியில் மிக மோசமான ஒரு நோயாளியாக இருந்தது, கண்கொண்டு காண முடியாத ஒரு கொடுமையாகவே அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் இருந்தது. உடல் ஆரோக்கியமும், நல்ல பலசாலியாகவும் இருந்தவர். பல படங்களில் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்தவர். சுவறில் ஏறி எகிறி திரும்பி உதைக்கும் ஸ்டைலில் விஜயகாந்துக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்புண்டு.
இந்நிலையில் அவர் மிக மோசமான நிலையில், பல ஆண்டுகள் நோயாளியாக இருந்து மறைந்தது பலருக்கும் பலத்த வேதனையை தந்தது. இதுகுறித்து, டாக்டர் காந்தராஜ் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, விஜயகாந்துக்கு 2 சிறுநீரகங்களும் பழுதுபட்டுவிட்டது. டயாலைசிஸ் செய்யப்பட்டது. மாற்று சிறுநீரகங்கள் வைத்தாலும் 3 முதல் 8 ஆண்டுகள்தான் அது தாக்குபிடிக்கும். மீண்டும் சிறுநீரகங்கள் பொருத்த, சிறுநீரகங்கள் கிடைக்க வேண்டும்.
அதை பொருத்த உடல் முதுமை ஒத்துழைக்க வேண்டும். விஜயகாந்தை பொருத்தவரை மிக ஆரோக்கியமாக இருந்தவர். நன்றாக சாப்பிட்டவர். உடற்பயிற்சி செய்து நல்ல கம்பீரமான தோற்றத்தில் இருந்தவர். அவரது உணவு பழக்க வழக்கம், மரபு ரீதியான உடல் நோய்கள் போன்றவை தெரியவில்லை. ஆனால் வெளிநாடுகளுக்கு சென்றும் அவரது நோய் குணமாகவில்லை.
நிற்கவும், உட்காரவும் முடியாத நிலையில், ஜடம் மாதிரி விழுகிற விஜயகாந்தை, கோமா ஸ்டேஜில் இருக்கும் ஒருவரை கட்சி பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்ட செய்த கொடுமை எல்லாம் ஒரு டாக்டராக என்னால் பார்க்கவே முடியவில்லை. இதற்கு எப்படி டாக்டர்கள் அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. மிகப்பெரிய கொடுமையாக அது இருந்தது. தேமுதிக கட்சி பிரமேலதாவின் தம்பி சுதீஷ் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்கிறார்கள்.
தேமுதிக கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை விட, எதிர்காலத்தில் தேமுதிக என்ற கட்சி இருக்குமா என்றுதான் கேட்க வேண்டும். விஜயகாந்த் இந்த நோயால்தான் இறந்தார் என்பது தெரியவில்லை. ஆனால் நுரையீரல் பாதிப்பால் கெட்டுப்போய் இறந்ததாக கூறப்படுகிறது, என்று டாக்டர் காந்தராஜ் அதில் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…