சமீப காலமாகவே சாலைகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாகிக் கொண்டே வருகிறது . சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்கள் கடியால் பாதிக்கப்பட்ட ராபிஸ் நோய் தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதைக்குறித்து டெல்லி – என்சிஆர் பகுதியில் உள்ள 10 லட்ச தெரு நாய்களை கருத்தடை செய்து காப்பகத்தில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விலங்கு நல ஆய்வாளர்கள் இதை எதிர்த்து மனு தாக்கல் செய்தனர். இவ்வளவு நாய்களை ஒரே இடத்தில் அடைத்தால் அதற்கு உணவு இல்லாமல் சண்டை போட்டே நாய்கள் இறக்க வாய்ப்பு உண்டு. அது மட்டும் இல்லாமல் இவ்வளவு நாய்களை ஒரே இடத்தில் அடைக்க காப்பகம் இல்லை என்று மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதுபோன்ற வாதங்களை எல்லாம் வைக்காதீர்கள் என தெரிவித்துள்ள நீதிபதிகள், 8 வாரங்களில் நாய்களுக்கு தடுப்பூசி போட்டு காப்பகத்தில் அடைக்க வேண்டும் . இதற்காக நிபுணர்களை பணியவர்த்த வேண்டும் , நாய்கள் இருக்கும் இடத்தில் சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்க வேண்டும் , நாய் கடித்தால் புகார் அளிக்க தனி ஹெல்ப்லைன் அமைக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிரபல நடிகரான மிதுன் சக்ரவர்த்தி (74) தானாகவே முன்வந்து நாய்களுக்காக ரூ. 45 கோடி சொத்தை ஒதுக்கி உள்ளார். ஹிந்தி நடிகரான இவர் பல்வேறு மொழிகளில் இதுவரைக்கும் 350 க்கும் அதிகமான படங்களை நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘குரு’ படத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் , மாதவன் ஆகியோருடன் இணைந்து மிதுன் சக்கரவர்த்தியும் நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மூலம் எம்பியாக தேர்வு செய்தார். சில நாட்களுக்குப் பிறகு பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார்.
இவருக்கு 400 கோடிக்கு அதிகமாக சொத்து உள்ளது. அதன் பெயரில் ரூ.45 கோடியை நாய்களுக்காக ஒதுக்கி உள்ளார். இவர் ஒரு நாய் பிரியர், 116 நாய்களை வளர்த்து வருகிறாராம் . இதற்காகவே மும்பையில் மீட் தீவில் 1.5 ஏக்கர் பண்ணை வீடு கட்டி, ஒவ்வொரு நாய்களுக்கும் தனித்தனியாக அரை அமைத்துள்ளாராம். நாய்களை பராமரிக்க பணியாளர்கள் , மருத்துவ வசதி இது மட்டுமில்லாமல் விளையாடுவதற்கு தனி பகுதிகள் என நாய்கள் ஆடம்பரமாக வசித்து வருகிறதாம் . இது மட்டும் இல்லாமல் தெரு நாய்களை தத்தெடுத்து வளர்த்து வருகிறாராம்.
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில், தங்களது ‘WE THE LEADERS’ இயக்கத்தின் மூலம் ஆன்லைனில் இணைந்த…
தேர்தல் சமயத்தில் திமுகவில் இருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்திய தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) கருணாநிதி, தற்போது முறைப்படி…
தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் அதிரடியான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த…
பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, "சாமானியன்" என்ற புதிய முகமூடியோடு தன் அரசியல் பயணத்தைத் தனித்துப் பிரகடனப்படுத்தியுள்ளார் அண்ணாமலை. டெல்லி…
திரைப்படங்களில் வருவது போல, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று…
தமிழக அரசியல் களம் மீண்டும் ஒரு அதிரடித் திருப்பத்தைக் கண்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும்,…