#image_title
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-தனுஷ் ஜோடி கடந்த 2020 ஆம் ஆண்டு தங்களது பிரிவை சமூக வலைத்தளங்களின் மூலம் அறிவித்தனர். அதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து பெறப்போவதாகவும் அறிவித்தனர்.
கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-தனுஷ் ஆகியோரின் விவாகரத்து குறித்த பேச்சுக்கள்தான் அதிகம் தென்படுகின்றன.
இந்த நிலையில் பிரபல நடிகரும் மருத்துவருமான டாக்டர்.காந்தராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிரூபர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-தனுஷ் ஆகியோரின் பிரிவை குறித்து கருத்துக்களை கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த டாக்டர். காந்தராஜ், “பெண்ணுடைய தந்தை குடும்பம் வசதி படைத்தவர்களாக இருந்தால் அந்த பெண் தனது மாமியார் வீட்டிற்கு போகமாட்டாள். பொருளாதார வேறுபாடுகள் வரும்போது மாமனார் வீடு ஒரு சாதாரண குடும்பமாக இருந்தால் பெரிய இடத்தைச் சேர்ந்த பெண் அந்த வீட்டிற்குப் போகமாட்டாள். முடிந்தவரை கணவனை தனது வீட்டிற்கு அழைத்து வந்து வைத்துக்கொள்ளப் பார்ப்பாள். இல்லை என்றால் அந்த கணவனை வேண்டாம் என்று ஒதுக்கிவிடுவாள். பொருளாதார விடுதலைதான் இது போன்ற சிக்கல்களுக்கு முக்கிய காரணம்” என்று கூறிய அவர்,
“பெரிய வீட்டு பெண் மாமனார் வீட்டில் இருந்தாலும் ஒரு சின்ன பிரச்சனை வந்தால் கூட தனது தந்தையின் வீட்டிற்குச் சென்று உட்கார்ந்துகொள்வாள். ஒரு வேளை தந்தை வீடு செட் ஆகவில்லை என்றால் மீண்டும் கணவன் வீட்டிற்குச் சென்று அடைக்கலம் ஆகிவிடுவாள். அதுதான் இன்றைக்குள்ள பெண்களின் நிலை” என்றும் டாக்டர்.காந்தராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…