தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் ரஜினியின் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் தான் வேட்டையன். இன்வெஸ்டிகேஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் இறுதியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிராகவும் கல்விக் கொள்கைக்கு எதிராகவும் கருத்துக்களை கதக்களமாக கொண்டிருந்தன. இயக்குனர் டி.ஜே ஞானவேல் இயக்கி இருந்த இப்படத்தில் ரஜினியுடன் மஞ்சுவாரியார், ராணா, துஷாரா விஜயன் மற்றும் பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அமிதாப்பச்சன் நீண்ட காலத்திற்குப் பிறகு ரஜினியுடன் இப்படம் மூலம் இணைத்து இருந்தார்.
இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சிறப்பாகவே அமைந்திருந்தது. இந்த நிலையில் வேட்டையின் திரைப்படம் குறித்து இயக்குனர் ஞானவேல் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அதில், படத்தின் நாயகனுக்கு பிடிக்காதவர்களும் தனக்கு பிடிக்காதவர்களும் இந்த படத்திற்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்று விட்டனர். ஒரு படத்தில் விமர்சனம் என்பது எந்த நோக்கத்திற்காக வெளியிடப்படுகிறது என்பது நாம் அனைவரும் எழுப்ப வேண்டிய கேள்வி. படங்கள் ரிலீஸ் ஆனாலும் அது குறித்த விமர்சனங்களை பார்க்கும் பழக்கம் அனைவருக்கும் வந்துள்ளது.
ஒருமுறை படம் மோசம் என்ற பார்வை ரசிகர்களுக்கு வந்து விட்டால் அதை மாற்றவே முடியாது. பெண் குழந்தைகளுக்கு கள்ளிபால் கொடுப்பது போலத்தான் இதுவும். பிடிக்காதவர்களின் படங்களுக்கு உடனே கள்ளிப்பால் ஊற்றும் மனப்பான்மை அநேகம் பேருக்கு உள்ளது. தன்னுடைய கருத்திற்கு எதிரான மனநிலையைக் கொண்டவர்கள் தனக்கு எதிராக பேசத்தான் செய்வார்கள் என்பதை தான் இந்த மனநிலை காட்டுகிறது என்று ஞானவேல் வருத்தத்துடன் பேசியுள்ளார்.
கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…
மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…