நடிப்பை தாண்டி திரைப்படங்களை இயக்கியுள்ள பரமா.. விஷாலுக்கே அடையாளம் வாங்கி கொடுத்த திமிரு..

By Begam

Updated on:

தமிழ் சினிமாவில் இரண்டு சூப்பர் ஹிட் கொடுத்து பின்னர் அடையாளம் தெரியாமல் காணாமல் போனவர் தான் இயக்குனர் தருண் கோபி. இவர் நடிகர் விஷால் நடித்து சூப்பர் ஹிட்  அடித்த ‘திமிரு’ படத்தை இயக்கியவர். இத்திரைப்படம் நடிகர் விஷாலின் திரைவாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது.

director tarun gopi

#image_title#image_titleமுதல் படமே பெரிய வெற்றியைப் பெற்றதால் தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது.  திமிரு படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு, வேதிகா, சங்கீதா ஆகியோர் நடிப்பில் காளை என்ற படத்தை இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

   

இதைத்தொடர்ந்து  ‘மாயாண்டி குடும்பத்தார்’ எனும் படத்தில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். மாயாண்டி குடும்பத்தார் படமும் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் மூலம் பரமா வாக ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார் இயக்குனர் தருண் கோபி. தற்பொழுது திமிரு , காளை என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியது ‘நம்ம பரமா வா…?’ என ரசிகர்கள் இத்தகவலை அறிந்து ஷாக்கில் உள்ளனர்.