ஸ்ரீதர் 1933ம் ஆண்டு ஜீலை 22ம் தேதி தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தார். பள்ளிக் காலத்திலேயே நாடகங்கள் எழுதிய இவர் தன்னுடைய 21 வயதிலேயே திரைப்படத்துறைக்குள் கதாசிரியராக நுழைந்தார். ரத்தபாசம் நாடகத்தில் இவரது எழுத்துக்கள் கவனம் பெற்றது. நாடக அரங்கள உரிமையாளர் டி.கே.சண்முகம் அந்த நாடகத்தினால் ஈர்க்கப்பட்டு, அந்த நாடகம் அனைத்து பெரு நகரங்களிலும் நடத்தப்படும் என்று உறுதியளித்தார். இந்த நாடகம் வெற்றி பெற்றதையடுத்து, இவருக்கு தமிழ் சினிமாவில் எழுத வாய்ப்பு கிடைத்தது.
1954ம் ஆண்டு தன்னுடைய 21 ஆவது வயதில், சிவாஜி கணேசன், பத்மினி நடித்த எதிர்பாராதது என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப்படத்தை இயக்கியவர் சித்தரப்பு நாராயணமூர்த்தி. அதன்பின்னர் ஸ்ரீதருக்கு வரிசையாக படங்களில் கதை எழுத வாய்ப்புகள் குவிந்தன. அப்படி ஸ்கிரிப்ட் எழுதிய மற்றொரு ஹிட் திரைப்படம் அமரதீபம். இந்தப்படம் வெளியான ஆண்டு 1956.
இந்தப்படம் இந்தியில் அமர் தீப் என்ற பெயரில் 1958ம் ஆண்டு தேவ்ஆனந்த் வைஜெயந்திமாலா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. கதையாசிரியராக மட்டும் இருப்பதை விரும்பாத ஸ்ரீதர், இயக்குனராக மாற வேண்டும் என்று முடிவெடுத்தார் ஸ்ரீதர். இவரது இயக்கத்தில் உருவான முதல் படமாக கல்யாண பரிசு உருவானது. அந்த படமே தமிழ் சினிமாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. முக்கோணக் காதல் கதையை வித்தியாசமான பாணியில் அவர் உருவாக்கியிருந்தார்.
இந்தப்படத்தில் ஜெமினி கணேசன் மற்றும் சரோஜா தேவி ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்தப்படம் ஜெமினி கணேசனுக்கும் பெரிய ஹிட் கொடுத்தது. சரோஜா தேவிக்கும் இந்தப்படம் ஒரு நல்ல திரும்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை , சிவந்த மண் பொன்ற ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்தார்.
தன்னுடைய ஹிட் படங்களை இந்தியிலும் ரீமேக் செய்து அங்கும் வெற்றிக் கொடி நாட்டினார். 80 களிலும் அவர் இளமை ஊஞ்சலாடுகிறது, அழகே உன்னை ஆராதிக்கிறேன், யாரோ எழுதிய கவிதை உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கினார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார்.
'புஷ்பா புருஷன்' என்கின்ற டயலாக் மூலமாக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பு ஒரு…
தமிழ் சினிமாவில் கொஞ்சும் தமிழ் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவரை தமிழ் ரசிகர்கள்…
தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும்…
வனிதா விஜயகுமார் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் என்ட்ரி கொடுத்தார் பிக் பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு…
பிரபல பாடகியான சுசித்ரா நாளுக்கு நாள் பல நடிகர் நடிகைகளை பற்றி திடுக்கிடும் தகவல்களை கூறி சினிமா வட்டாரத்தையே திணறடித்து…
தமிழ் சினிமாவில் சிவகுமார் போல மார்க்கண்டேயனாக வலம் வருபவர் சரத்குமார். 70 வயதிலும் அவர் 30 வயது இளைஞர் போல…