இயக்குநர் ஷங்கர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். ரஜினி, கமல், விஜய், சியான் விக்ரம், அர்ஜூன் போன்ற முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்தவர். இப்போது இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3, ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் ஆகிய படங்களை எடுத்து வருகிறார். ஷங்கருக்க பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயர் உண்டு.ஏனெனில் அவர் எந்த படம் எடுத்தாலும், அதில் பிரம்மாண்டம் நிச்சயம் இருக்கும். ஜெண்டில்மேன், காதலன், சிவாஜி, இந்தியன், ஐ, அந்நியன், பாய்ஸ், முதல்வன் என அவரது படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற படங்களாக அமைந்தன.
ரஜினிக்கு இரண்டு மகள்கள், கமலுக்கு இரண்டு மகள்கள் அதுபோல இயக்குநர் ஷங்கருக்கும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். முதல் மகள் ஐஸ்வர்யா. இரண்டாவது மகள் அதிதி சங்கர். முதல் மகள் ஐஸ்வர்யாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன் பாண்டிச்சேரியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் மற்றும் கிரிக்கெட் பயிற்சியாளர் ரோஹித் என்பவருக்கு, திருமணம் செய்து வைத்தார். இந்த திருமண விழாவை இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்டமாக நடத்தினர். வுிழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார். ஆனால், திருமணமான ஆறே மாதங்களில் ஐஸ்வர்யா, தனது கணவர் ரோஹித் நடவடிக்கை சரியில்லை என, அப்பா ஷங்கர் வீட்டுக்கே திரும்பி வந்துவிட்டார். பல பெண்களுடன் தொடர்பில் உள்ள அவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என வாழாவெட்டியாக இருக்கிறார். விவாகரத்தும் கேட்டு கோர்ட்டில் மனு செய்துள்ளார்.
இந்நிலையில், அவரது இரண்டாவது மகள் அதிதி ஷங்கர், டாக்டருக்கு படித்துள்ளார். பல் டாக்டராக அவர், மருத்துவமனையில் டாக்டர் பணி செய்ய விரும்பாமல் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். ஷங்கருக்கு விருப்பமே இல்லை என்றாலும், மகள் விருப்பத்துக்காக நடிக்க சம்மதித்தார். அதுவும் விருமன் படத்தில் சிவக்குமார் மகன் கார்த்தி கதாநாயகன் என்பதால் ஒத்துக்கொண்டார். ஆனால், அதற்கு பின் சிவகார்த்திகேயனுடன் மாவீரன் உள்பட 4 படங்களில் அவர் நடிக்க கமிட் ஆனதை அறிந்த ஷங்கர் மிகவும் வருத்தப்பட்டார்.
தன் மகள் அதிதி ஷங்கரிடம் இதுபற்றி அவர் பலமுறை பேசியும் நான் நடித்துதான் தீருவேன். நடிப்பில்தான் எனக்கு ஆர்வம். என் ஆசைக்கு குறுக்கே நிற்காதீர்கள் என அதிதி தெளிவாக சொல்லி விட்டதால் ஷங்கர் மன உளைச்சலில் தவிக்கிறார். முதல் மகள் ஐஸ்வர்யா வாழ்க்கை இழந்து வாழாவெட்டியாக வீட்டில் இருக்கிறாள். இரண்டாவது மகள் அதிதி, தன் பேச்சுக்கு கட்டுப்படாமல் சினிமாவில் நடித்து வருகிறாள் என கண்ணீர் வடிக்காத குறையாத மனநிலையில் ஷங்கர் வாழ்கிறார் என, நேர்காணல் ஒன்றில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
நடிகை நயன்தாராவை வைத்து அந்த படத்தை எடுத்ததுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று பிரபல இயக்குனர் பேசியிருப்பது தற்போது…
லவ் டுடே படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன்…
தமிழ் சினிமாவில் தமிழர் நடிக்கும் நடிகைகளை கதாநாயகன் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. ஆனால் 70,…
புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பொருத்தவரை விலை மதிப்பில்லாத எத்தனையோ பரிசு பொருட்கள் அவரை தேடி வந்துள்ளது. ஆனால் எம்ஜிஆர் கேட்டு வாங்கிய…
பிகில் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை ரெபா மோனிகா வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…