தமிழ் திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக போற்றப்படுபவர் தான் இயக்குனர் சங்கர். இந்திய சினிமாவில் புதிய பரிணாமங்கள் கொண்ட படங்களையும் புதுவிதமான கதைகளையும் அறிமுகப்படுத்தி வைத்த இவருக்கு தற்போது 61 வயதாகிறது. சினிமா டயலாக் ஆக இருந்தாலும் பெரிதாக யோசித்தால் தான் பெரிதாக வர முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்களுள் ஒருவர் ஷங்கர். இவருடைய முதல் படமான ஜென்டில்மேன் பெரிய வெற்றியை பெற்றுத் தந்ததைத் தொடர்ந்து அடுத்து இயக்கிய காதலன், இந்தியன் மற்றும் ஜீன்ஸ் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சிம்பிளான ஃபீல் குட் காதல் படமாக இருந்தாலும் அதிலும் பிரம்மாண்டம் காட்டுவது தான் இவருடைய வேலையாக இருந்தது. அதற்கு ஏற்ப கதை மற்றும் திரைக்கதையையும் தயார் செய்யும் இவர் அன்று முதல் இன்று வரை தன் படங்களில் எந்த வகையான புது டெக்னாலஜியை உபயோகிக்கலாம் எதை புதிதாக கொண்டு வரலாம் என்ற எண்ணத்தை மட்டுமே கொண்டிருப்பார். இயக்குனர் சங்கர் இந்திய சினிமாவின் பெரிய இயக்குனராக விளங்கினாலும் இதுவரை வெகு சில படங்களை மட்டுமே அவர் இயக்கியுள்ளார். 30 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இருக்கும் இவர் இதுவரை சுமார் 17 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு படத்திற்கும் சரியாக இரண்டு அல்லது மூன்று வருட இடைவேளை எடுத்துக் கொள்வார். அதன் பலனாக கிடைக்கும் அவுட்புட்டும் கச்சதமாக இருக்கும். ஆனால் இந்தியன் 2 திரைப்படம் தான் சமீபத்தில் சொதப்பி விட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கதை என்பதாலும் லாஜிக் இல்லாத காட்சிகளாலும் படம் பாக்ஸ் ஆபிஸிலும் விமர்சனத்திலும் மரண அடி வாங்கியது. இதனைத் தொடர்ந்து ராம் சரணை வைத்து இவர் இறுதியாக கேம் சேஞ்சர் திரைப்படத்தை உருவாக்கியிருந்த நிலையில் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படியான நிலையில் இயக்குனர் சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய திரை வாழ்க்கை குறித்து பலரும் அறியாத சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், நான் சினிமாவுக்கு பிரம்மாண்டமான படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வரவில்லை. இயக்குனர் மகேந்திராவின் உதிரிப்பூக்கள் மற்றும் நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற திரைப்படங்கள் எல்லாம் மனதை வருடும் வகையில் மிக எளிமையாக இருக்கும். அதுபோன்ற படங்களை சினிமாவுக்கு கொடுக்க தான் ஆசைப்பட்டேன். ஆனால் நான் சென்ற தயாரிப்பாளர்கள் அனைவரும் அதை எதிர்பார்க்காமல் ஒரு பிரம்மாண்டத்தை தான் எதிர்பார்த்தனர். எளிமையான படங்களை கொடுக்க விரும்பிய எனக்கு சந்தர்ப்ப சூழ்நிலையால் அது அப்படியே மாறி போக தயாரிப்பாளர்களுக்கு இணங்க பிரம்மாண்டம் என்று மாறிவிட்டது. சினிமாவுக்கு வந்த புதுசால நான் நினைச்சது ஒன்னு அதுக்கப்புறம் நடந்தது ஒன்னு என்று சங்கர் பேசியுள்ளார்.
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அறியப்படும் பூங்குன்றன், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் தமிழக…
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…