#image_title
நடிகர் லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கும் 171-வது திரைப்படத்திற்காக ஒரு மிகப்பெரிய திட்டத்தை வகுத்திருக்கின்றார். இது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் இவர் 70 வயதை தாண்டிய நிலையிலும் தற்போது வரை ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். இளம் ஹீரோக்கள் கூட இவ்வளவு சுறுசுறுப்பாக இருப்பார்களா? என்பது சந்தேகம்தான் இந்த வயதிலும் கேப்பே விடாமல் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றார்.
நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து டி ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்கின்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாகவும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கூலி திரைப்படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகின்றார் நடிகர் ரஜினிகாந்த். ஏற்கனவே இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் தொடங்கும் என்று கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு சிரமம் எதுவும் வராமல் நடிக்க வைப்பதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடிவு எடுத்து இருக்கின்றாராம்.
ஏனென்றால் டி ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையின் திரைப்படத்தில் ரஜினியை வைத்து படாதபாடு படுத்தி விட்டார்களாம். இந்த படத்தில் பல ஆக்ஷன் காட்சிகள் இருந்ததால் அவரை பிழிந்து எடுத்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பல ஊர்களுக்கு சூட்டிங் அழைத்துச் சென்றதால் மிக டயர்ட் ஆகிவிட்டார் நடிகர் ரஜினிகாந்த். இதனால் ரஜினியை மிகவும் சிரமப்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கும் லோகேஷ் அதற்கான சில திட்டங்களை வகுத்திருக்கின்றாராம்.
மேலும் இந்த படப்பிடிப்பை இரண்டே இடங்களில் மட்டும் தான் நடத்தப் போகிறாராம். ஒன்று சென்னையில் இருக்கும் பிரசாந்த் ஸ்டூடியோ, மற்றொன்று ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ஸ்டுடியோ இரண்டு இடங்களில் மட்டும் படப்பிடிப்பை முடித்து விட முடிவு செய்து இருக்கின்றார் லோகேஷ் கனகராஜ்.
ஆனால் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே ஆக்சன் காட்சிகள் நிரம்பி இருக்கும். அதுதான் அவருடைய ஸ்பெஷாலிட்டி, அப்படி இருக்கும்போது எப்படி ரஜினிகாந்தை கஷ்டப்படுத்தாமல் இப்படத்தை அவர் எடுத்து முடிக்கப் போகிறார் என்று பலரும் பேசி வருகிறார்கள். கண்டிப்பாக ஜூலை மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல் வெளியாகியிருக்கின்றது.
நடிகை வரலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி…
சண்முக பாண்டியன் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…