திருமணமாகி 5 வருடங்கள் கழித்து விவாகரத்து.. ஜோதிகா பட இயக்குனர் எடுத்த திடீர் முடிவு.. என்ன காரணம்..?

By Nanthini

Updated on:

சமீபகாலமாகவே சினிமா பிரபலங்கள் பலரும் திருமணம் முடிந்து சில வருடங்களிலேயே விவாகரத்து செய்து பிரிவது என்பது வழக்கமாகிவிட்டது. அதன்படி விஜய் பட பிரபலம் ஒருவர் திடீரென விவாகரத்தை செய்து இருக்கும் தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தில் விஜய்க்கு ஸ்டைலிஷ் ஆக இருந்தவர் தான் ஜாய் கிரிசில்டா. இந்த படத்தின் மூலமாக சினிமாவில் இவர் அறிமுகமான நிலையில் பலரது பாராட்டுகளையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து ராஜதந்திரம், டார்லிங், மிருதன், வேலைக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

   

இவர் ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படத்தின் இயக்குனர் ஜே ஜே பெட்ரிக்கை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இதனை தொடர்ந்து இருவரும் 2018 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த நிலையில் இவர்களுக்கு தற்போது ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் திருமணம் ஆகி 5 வருடங்கள் நிறைவடைந்து உள்ள நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற பிரிந்து விட்டார்கள். இதனை ஜாய் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில், நாங்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிக்கிறோம். எனக்கு எப்போதும் போல் நண்பர்கள் மற்றும் என் உறவினர்கள் ஆதரவாக உள்ளனர். விவாகரத்து என்பது தோல்வி அல்ல. அது அடுத்த கட்டத்திற்கான ஆரம்பம் என்று அவர் கூறியுள்ளார். அதே சமயம் திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில் பேஷன் டிசைன்களில் மட்டும் தனது கவனத்தை செலுத்தி வந்தார். இருந்தாலும் தற்போது விவாகரத்திற்கு பிறகு இவர் ஸ்டைலிஷ் பணிகளில் கவனம் செலுத்துவார் என்றும் கூறப்படுகின்றது. தற்போது இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

author avatar
Nanthini