விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் 7 வது சீசன் தொடங்கியது. இதில் விசித்ரா, விஷ்ணு, வினுஷா தேவி, சரவணன், பாவா செல்லதுரை, கூல் சுரேஷ், ஆயிஷா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, பிரதீப் ஆண்டனி என 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் அனன்யா தற்பொழுது வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த தடவை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி ஒரு சில நாட்களிலேயே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இந்த வார இறுதி ஹாட் டாபிக்காக மாறியது ஜோவிகா விசித்ரா சண்டை தான்.
படிப்பு தேவையா தேவையில்லையா என்பது பொது விவாதமாக மாறி இணையத்தில் பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கமலஹாசன் அவர்களும் மேடையில் கல்வி அவசியம் எனக்கூறி விசித்ராவுக்கு சப்போர்ட் செய்தார். இந்த சூழலில் இந்த வார நாமினேஷனில் பவா செல்லதுரை, அனன்யா, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் இருக்கின்றனர். இதில் அனன்யா நேற்று முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பவா செல்லத்துரை தற்பொழுது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வார பிக் பாஸ் வீட்டின் அடுத்த கேப்டனாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரிடம், சக போட்டியாளர்களைப் பற்றி ஓரே வார்த்தையில் சொல்லச் சொல்லிக் கேட்டிருக்கிறார் பிக் பாஸ். ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் தன் கருத்தைச் சொல்லி வந்த சரவணன், பவா செல்லத்துரை குறித்துக் குறிப்பிடும் போது ‘சோம்பேறி’ எனக் குறிப்பிட்டாராம். அதுமட்டுமின்றி, தொடர்ந்து இந்த வாரமும் பவா செல்லத்துரை இரண்டாம் வீட்டிலேயே இருக்கிறாராம்.
ஏற்கனவே ஜோவிகா விஷயத்தில் ‘படிச்சா மட்டும்தான் வாழ முடியுமா’ எனக் கேட்டு சர்ச்சையில் சிக்கினார். இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் ‘ஓர் எழுத்தாளர் இப்படிப் பேசலாமா’ என அவரை வறுத்தெடுத்து வந்தனர். தற்பொழுது அவரே’ இந்த வீட்டில் என்னால் சில டாஸ்குகளைச் செய்ய இயலாது. இந்த வீட்டுக்கு நான் வரும் போது சூழ்ச்சிகள், சதிகள் எல்லாம் இருக்குமெனத் தெரிந்துதான் வந்தேன். ஆனால் இங்குக் கூடுதலாக வன்மமும் அதிகமாக இருக்கிறது. எனவே தொடர்ந்து இங்கு இருந்து டாஸ்குகளைச் செய்ய என் உடலும் ஒத்துழைக்காது. எனவே நான் வெளியேறி விடுகிறேன்’எனக் கூறி வெளியேறி விட்டாராம். இதோ வீடியோ…
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…