விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் 7 வது சீசன் தொடங்கியது. இதில் விசித்ரா, விஷ்ணு, வினுஷா தேவி, சரவணன், பாவா செல்லதுரை, கூல் சுரேஷ், ஆயிஷா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, பிரதீப் ஆண்டனி என 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் அனன்யா தற்பொழுது வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த தடவை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி ஒரு சில நாட்களிலேயே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இந்த வார இறுதி ஹாட் டாபிக்காக மாறியது ஜோவிகா விசித்ரா சண்டை தான்.
படிப்பு தேவையா தேவையில்லையா என்பது பொது விவாதமாக மாறி இணையத்தில் பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கமலஹாசன் அவர்களும் மேடையில் கல்வி அவசியம் எனக்கூறி விசித்ராவுக்கு சப்போர்ட் செய்தார். இந்த சூழலில் இந்த வார நாமினேஷனில் பவா செல்லதுரை, அனன்யா, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் இருக்கின்றனர். இதில் அனன்யா நேற்று முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பவா செல்லத்துரை தற்பொழுது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வார பிக் பாஸ் வீட்டின் அடுத்த கேப்டனாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரிடம், சக போட்டியாளர்களைப் பற்றி ஓரே வார்த்தையில் சொல்லச் சொல்லிக் கேட்டிருக்கிறார் பிக் பாஸ். ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் தன் கருத்தைச் சொல்லி வந்த சரவணன், பவா செல்லத்துரை குறித்துக் குறிப்பிடும் போது ‘சோம்பேறி’ எனக் குறிப்பிட்டாராம். அதுமட்டுமின்றி, தொடர்ந்து இந்த வாரமும் பவா செல்லத்துரை இரண்டாம் வீட்டிலேயே இருக்கிறாராம்.
ஏற்கனவே ஜோவிகா விஷயத்தில் ‘படிச்சா மட்டும்தான் வாழ முடியுமா’ எனக் கேட்டு சர்ச்சையில் சிக்கினார். இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் ‘ஓர் எழுத்தாளர் இப்படிப் பேசலாமா’ என அவரை வறுத்தெடுத்து வந்தனர். தற்பொழுது அவரே’ இந்த வீட்டில் என்னால் சில டாஸ்குகளைச் செய்ய இயலாது. இந்த வீட்டுக்கு நான் வரும் போது சூழ்ச்சிகள், சதிகள் எல்லாம் இருக்குமெனத் தெரிந்துதான் வந்தேன். ஆனால் இங்குக் கூடுதலாக வன்மமும் அதிகமாக இருக்கிறது. எனவே தொடர்ந்து இங்கு இருந்து டாஸ்குகளைச் செய்ய என் உடலும் ஒத்துழைக்காது. எனவே நான் வெளியேறி விடுகிறேன்’எனக் கூறி வெளியேறி விட்டாராம். இதோ வீடியோ…
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முற்றியுள்ள போர்ப் பதற்றத்தால், உலகளவிலான எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இதயத்தை நொறுக்கும் சோகச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நவநீத் என்ற 4 வயது…
2029 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்துத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகள், தமிழகத்தில் ஆளும்…
தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து நடைபெற்று வரும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதியுடன் நிறைவடைய…
பஞ்சாப் மாநிலம் தார்ன் தரன் பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்காக 20 வயது வாலிபர் ஒருவர் கொடூரமாக…
திமுகவில் மாவட்ட அமைப்புகளை மறுசீரமைத்து, 110 உட்கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கும் பணிகளைத் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரப்படுத்தியுள்ளார். வயது வரம்பு மற்றும்…