கல்லூரி படிக்கும் போதே தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி அதன் பிறகு கனவுகள் இலவசம் என்ற சீரியலில் அறிமுகமானவர்தான் நடிகை தேவதர்ஷினி. படித்துக் கொண்டிருக்கும் போதே மர்மதேசம் தொடரில் நடிக்க தொடங்கி பிறகு எம் காம் படிப்பை தொலைநிலைக் கல்வியில் முடித்தார்.
இவருக்கு அடுத்தடுத்து சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் மர்ம தேசம் தொடரில் நடித்த போது தன்னுடன் நடித்த சேத்தன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகும் தனது நடிப்பை தொடர்ந்ததால் தற்போது ஒரு நடிகையாக நிலைத்து நிற்கிறார். பல திரைப்படங்களில் காமெடி நடிகையாக நடித்து அசத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
சிறப்பு நடிப்புக்காக பல்வேறு விருதுகளை வாங்கியுள்ள தேவதர்ஷினி தற்போது தன்னுடைய மகள் ஹீரோயினி லுக்கில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.
தேவதர்ஷினியின் மகள் நியதி, விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் தேவதர்ஷினியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
முதல் திரைப்படத்திலேயே இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அந்த ஒரு படத்தோடு விலகி தனது படிப்பை தொடர்ந்தார். தற்போது படிப்பை முடித்து விட்டதால் நடிக்க தயாராகி விட்டார்.
அதன்படி மலையாளத்தில் ராணி என்ற திரைப்படத்தில் நியதி நடித்து வருகின்றார். அடுத்ததாக அவர் தமிழ் படத்தில் நடிக்க முயற்சித்து வரும் நிலையில் தற்போது ராணி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…